பேஸ்புக் காதலனை நம்பி காதல் கணவரை கைவிட்ட இளம்பெண்!!

Read Time:3 Minute, 23 Second

9ec13bd9-21bd-4d38-9719-c292bba80d44_S_secvpfதிருவட்டார் பகுதியை சேர்ந்தவர் ராஜா. இவரது மனைவி ராணி(இருவரது பெயர்களும் மாற்றப்பட்டுள்ளது). பள்ளியில் ஒன்றாக படித்த போது இவர்களுக்கிடையே காதல் மலர்ந்தது. இவர்கள் பெற்றோர் எதிர்ப்பை மீறி கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். சில மாதங்களுக்கு பிறகு ராஜா வீட்டார் அவரை ஏற்றுக் கொண்டனர்.

மனைவியுடன் தனது வீட்டில் வசித்த ராஜா சில மாதங்களுக்கு முன்பு வெளிநாட்டு வேலைக்கு சென்றார். மாமனார்– மாமியாருடன் வசித்து வந்த ராணிக்கு பேஸ்புக் மூலம் ஒரு வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டது. அடிக்கடி பேஸ் புக்கில் பேசிய போது அந்த வாலிபரும் அதேபகுதியை சேர்ந்தவர் என்பது தெரிய வந்தது. இதனால் இருவரும் நேரில் சந்தித்து பேசினர்.

இதில் அவர்களுக்கிடையே நெருக்கம் அதிகமானது. பேஸ்புக் காதலனை அடிக்கடி சந்திக்க வசதியாக ராணி தனது பெற்றோர் வீட்டுக்கு சென்றார். அங்கிருந்து பேஸ் புக் வாலிபருடன் சுற்றத் தொடங்கினார். இது அரசல் புரசலாக அக்கம் பக்கத்தினருக்கு தெரிய வந்தது.

எனவே ராஜாவினர் உறவினர்கள் ராணியின் வீட்டுக்கு சென்று விசாரித்தனர். அப்போது ராணி உறவினர் வீட்டுக்கு சென்றிருப்பதாக கூறி சமாளித்துள்ளனர். பின்னர் ராணியை அவரது பெற்றோர் கண்டித்தனர். என்றாலும் பேஸ்புக் காதலனுக்காக காதல் கணவரை மறக்க ராணி முடிவு செய்ததால் பெற்றோரின் கண்டிப்பையும் கண்டு கொள்ளவில்லை.

இந்தநிலையில், உள்ளூரில் சுற்றித் திரிந்த இந்த ஜோடி ஜாலியாக இருப்பதற்காக சமீபத்தில் நெல்லைக்கு சென்றனர். அங்கு ஒரு லாட்ஜில் அறை எடுத்து தங்கியிருந்த போது போலீசார் அங்கு சோதனை நடத்தினர். சந்தேகத்திற்கிடமாக இருந்த இந்த ஜோடியிடம் போலீசார் விசாரித்த போது முன்னுக்குப்பின் முரணாக பேசினர்.

இதையடுத்து போலீசார் இவர்களை மகளிர் போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரித்த போது நடந்த சம்பவங்கள் அனைத்தும் போலீசாருக்கு தெரிய வந்தது. உடனே போலீசார் ராணியின் பெற்றோருக்கு தகவல் கூறி வரவழைத்தனர். பின்னர் ராணிக்கு அறிவுரை கூறினர். ‘பேஸ்புக் காதலனை நம்பி காதல் கணவரை கைவிட்டு விடாதே’ என அறிவுரைகள் கூறிய போலீசார் அவரை வீழ்த்திய வாலிபரை கடுமையாக எச்சரித்து அனுப்பினர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மாநகர பஸ்சில் பயணம் செய்த போது பெண் போலீசின் மடியில் உட்கார்ந்த போதை ஆசாமி!!
Next post கத்திக்கு பிறகு அடுத்த படம் எது தெரியுமா?