தர்மபுரியில் நர்சிங் மாணவியை கடத்தியதாக வாலிபர் கைது!!

Read Time:2 Minute, 9 Second

68157f54-0dff-4ac0-9531-206d95922e14_S_secvpfதர்மபுரி மாவட்டம் அலே தர்மபுரி பட்டாளம்மன் கோவில் தெருவை சேர்ந்த சுமார் 16 வயது மதிக்கத்தக்க ஒரு இளம்பெண் தர்மபுரியில் உள்ள ஒரு தனியார் நர்சிங் கல்லூரியில் டிப்ளமோ நர்சிங் பயின்று வந்தார். இதே கல்லூரியில் கடத்தூர் தாளநத்தம் பகுதியை சேர்ந்த அருணகிரி என்பவரது மகன் பெரியசாமி (23) என்பவரும் படித்து வருகிறார். 2 பேரும் வெவ்வேறு பிரிவை சேர்ந்தவர்கள்.
இந்த நிலையில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு கல்லூரிக்கு சென்ற மாணவி மீண்டும் வீடு திரும்பவில்லை. இதையடுத்து பல இடங்களில் தேடிப்பார்த்தனர். ஆனால் எங்கு தேடியும் மாணவியை கண்டுபிடிக்க முடியவில்லை.

இதையடுத்து மாணவியின் தாய், தர்மபுரி டவுன் போலீசில் ஒரு புகார் செய்தார். அந்த புகாரில் தனது மகளை கடத்தூர் தாளநத்தம் பகுதியை சேர்ந்த பெரியசாமி என்ற வாலிபர் ஆசை வார்த்தை காட்டி கடத்தி சென்றதாக கூறியிருந்தார்.

இதையடுத்து போலீசார் விசாரணை நடத்தினர். பின்னர் மாணவியை மீட்டனர். மேலும் மைனர் பெண்ணை கடத்தியதாக பெரியசாமியை கைது செய்தனர்.

மீட்கப்பட்ட மாணவியை போலீசார் இன்று தர்மபுரி கோர்ட்டில் ஆஜர்படுத்துகிறார்கள். கோர்ட்டில் மாணவி எங்கு செல்ல விருப்பம் தெரிவிக்கிறாரோ, அங்கு அவரை அனுப்பி வைப்பார்கள். இந்த சம்பவம் காரணமாக தர்மபுரி மாவட்டத்தில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post காங்கயம் அருகே கிணற்றில் குதித்து 10–ம் வகுப்பு மாணவன் பலி!!
Next post மாநகர பஸ்சில் பயணம் செய்த போது பெண் போலீசின் மடியில் உட்கார்ந்த போதை ஆசாமி!!