நித்தியின் ஆண்மைக்கு மீண்டும் சோதனையா?
Read Time:1 Minute, 24 Second
பெண் சிஷ்யை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில், கடந்த செப்டம்பர் 8ம் திகதி நடந்த ஆண்மை பரிசோதனைக்கு நித்யானந்தா முழுமையாக ஒத்துழைக்காத நிலையில், அவரிடம் மீண்டும் பரிசோதனை நடத்தப்படலாம் என செய்திகள் வெளியாகியுள்ளன.
பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையில் நடந்த சோதனையின் முடிவுகளை இதுவரை பொலிசாரிடம் மருத்துவமனை நிர்வாகம் வழங்கவில்லை.
பரிசோதனை முழுமையாக முடியாததால் அறிக்கை அளிக்க மருத்துவமனை நிர்வாகம் தயங்கி வருவதாக கூறப்படுகிறது.
இதனிடையே, பரிசோதனையிலிருந்து தப்பிக்க, சட்டத்தின் உதவியை நித்யானந்தா நாடியுள்ளார். எனினும் குற்றவியல் நடைமுறை சட்டம் செக்ஷன் 53ன்படி, வலுக்கட்டாயமாக நித்யானந்தாவை பரிசோதனைக்கு உட்படுத்த சட்டத்தில் இடமுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து அவர் மீண்டும் ஆண்மை பரிசோதனைக்கு உட்பட வேண்டிய கட்டாயம் எழுந்துள்ளது.
Average Rating