தாய் சாவில் மனைவி மீது சந்தேகம்: எஸ்.பி. ஆபீசில் கணவர் புகார்!!

Read Time:2 Minute, 6 Second

0cc45069-08f4-4139-ad58-7976f11d6d3a_S_secvpfஆம்பூரை அடுத்த ராலகொத்தூர் கிராமத்தை சேர்ந்த வெங்கடேசன் என்பவர் நேற்று போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமாரிடம் கொடுத்துள்ள மனுவில் கூறி இருப்பதாவது:–

எனக்கும், சாத்தம்பாக்கத்தை சேர்ந்த மது என்பவருக்கும் கடந்த 2005–ம் ஆண்டு திருமணம் நடந்தது. பின்னர் எனது மனைவி தனிக்குடித்தனம் செல்ல வேண்டும் என்று வற்புறுத்தினார்.

நான் மறுக்கவே தாய் வீட்டுக்கு சென்று விட்டார். எனது மனைவிக்கும், வேறொரு நபருக்கும் தொடர்பு ஏற்பட்டது. அதை தட்டிக் கேட்ட போது என்னை கொலை செய்து விடுவதாக மிரட்டினார்.

இந்த நிலையில் கடந்த ஜூன் மாதம் 9–ந் தேதி நான் வேலை விஷயமாக திருநெல்வேலி சென்றேன். அப்போது எனது தாயார் லட்சுமியை (வயது 55) சிலர் தாக்கியதில் வீட்டின் அருகில் உள்ள கோழிப்பண்ணையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் கிடந்தார். உடனடியாக அவர் சிகிச்சைக்காக சென்னை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார்.

இதுகுறித்து உமராபாத் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். யாரையும் கைது செய்யவில்லை.

இந்த கொலையில் எனது மனைவி மதுவுக்கும், அவரது தந்தை ராஜேந்திரனுக்கும் தொடர்பு உள்ளது. எனவே, குற்றவாளிகளை உடனடியாக போலீசார் கைது செய்ய வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மனுவை பெற்ற போலீஸ் சூப்பிரண்டு நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post திண்டிவனம் அருகே கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவர்–மகனை கொன்ற பெண்!!
Next post நெல்லை அருகே 4 மாதமாக சிறை வைத்து பள்ளி மாணவி கற்பழிப்பு: ரவுடி கைது!!