திண்டிவனம் அருகே கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவர்–மகனை கொன்ற பெண்!!

Read Time:3 Minute, 37 Second

3a9aafb3-dac2-4646-9c87-043f101f2f45_S_secvpfதிண்டிவனம் அருகே உள்ள தீவனூரை சேர்ந்தவர் சிவா (வயது 45), பூ வியாபாரி. இவரது முதல் மனைவி இறந்துவிட்டதால் 2009–ம் ஆண்டு மீனாட்சி (24) என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு தாமரைச் செல்வன், பாலசூர்யா ஆகிய குழந்தைகள் உள்ளனர்.

சிவாவின் சித்தப்பா மகன் சுரேஷ் (30). இவர் சிவா வீட்டுக்கு அடிக்கடி வந்து செல்வார். அப்போது மீனாட்சிக்கும், சுரேசுக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டது. இது சிவாவுக்கு தெரியவந்தது. மனைவியை கண்டித்தார். இதையடுத்து சிவாவை தீர்த்து கட்ட வேண்டும் என்று மீனாட்சியும், சுரேசும் முடிவு செய்தனர். சுரேஷ் தனது நண்பர்கள் மணிகண்டன், பரசுராமன் ஆகியோருடன் சேர்ந்து சிவாவை கொல்வதற்கு திட்டம் தீட்டினார்.

கடந்த 29.2.2014 அன்று ஆசூர் அருகே சிவா மோட்டார் சைக்கிளில் சென்றார். அப்போது சுரேஷ், மணிகண்டன், பரசுராமன் ஆகிய 3 பேரும் மினிவேனை ஓட்டி சென்று சிவா மீது மோதினார்கள்.

இதில் படுகாயமடைந்த அவரை ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சிவா உயிரிழந்தார். போலீசார் இதை விபத்து வழக்காக பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.

சிவா இறந்த ஒரு மாதம் கழித்து சுரேசும், மீனாட்சியும் ஊரை விட்டு வெளியேறி கோலியனூருக்கு சென்றனர். அங்கு இருவரும் குடும்பம் நடத்தி வந்தனர். மீனாட்சி தனது 2 குழந்தைகளையும் அங்கு அழைத்து சென்றிருந்தார்.

இந்த நிலையில் கடந்த ஜூலை மாதம் 19–ந் தேதி 2–வது மகன் பாலசூர்யா வீட்டில் அழுது கொண்டிருந்தான். அவனை சுரேஷ் அடித்து தள்ளினார். இதில் தலையில் பலத்த காயமடைந்த பாலசூர்யா ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டான். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான். இதையும் போலீசார் விபத்து வழக்காக பதிவு செய்தனர்.

கணவன், மகன் என 2 கொலைகள் நடந்தும் அதை போலீசார் விபத்து என கருதியதால் கள்ளக்காதல் ஜோடி சந்தோஷமாக இருந்து வந்தனர். இந்த நிலையில் மூத்தமகன் தாமரைச்செல்வனையும், மீனாட்சியும் சுரேசும் கொடுமைபடுத்தி வந்தனர். இதை அறிந்த அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தியபோது சிவா–பாலசூர்யா இருவரும் கொலை செய்யப்பட்ட விஷயம் தெரியவந்தது. அதைத்தொடர்ந்து ரோசணை போலீசார் இருவரையும் கைது செய்தனர். மேலும் வேனை ஏற்றி கொல்வதற்கு உடந்தையாக இருந்த சுரேசின் கூட்டாளிகள் மணிகண்டன், பரசுராமன் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post காதலனால் கர்ப்பமான பிளஸ்–1 மாணவியை மிரட்டி கற்பழித்த பால் வியாபாரி!!
Next post தாய் சாவில் மனைவி மீது சந்தேகம்: எஸ்.பி. ஆபீசில் கணவர் புகார்!!