காதலனால் கர்ப்பமான பிளஸ்–1 மாணவியை மிரட்டி கற்பழித்த பால் வியாபாரி!!

Read Time:4 Minute, 47 Second

8c76b3b0-32ca-4274-ac5e-9bbd24fe2096_S_secvpfகொல்லங்கோடு பகுதியை சேர்ந்த 17 வயது மாணவி அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ்–1 படித்து வந்தார். இவர் தினமும் பள்ளிக்கு நடந்து சென்று வந்த போது அப்பகுதியை சேர்ந்த கார் டிரைவர் அஜீஸ் (22) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இவர் தினமும் மாணவியை காரில் பள்ளிக்கு அழைத்து சென்றார்.

நாளடைவில் மாணவியை காதல் வலையில் வீழ்த்திய அஜீஸ் அவரை திருமணம் செய்து கொள்வதாக கூறி காரில் வைத்தும், அப்பகுதியில் உள்ள தென்னந்தோப்புக்கு அழைத்து சென்றும் பல முறை கற்பழித்தார். இதில் மாணவி கர்ப்பமடைந்தார்.

மாணவியின் நடவடிக்கையில் மாற்றத்தை உணர்ந்த பெற்றோர் அவரிடம் விசாரித்த போது நடந்த சம்பவங்களை கூறினார். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த மாணவியின் பெற்றோர் அஜீசின் வீட்டுக்கு சென்று தங்களது மகளை திருமணம் செய்து கொள்ளுமாறு கூறினர்.

ஏழ்மை நிலையில் இருந்த மாணவியை அஜீசுக்கு திருமணம் செய்து வைக்க அவரது பெற்றோருக்கு மனமில்லை. எனவே அவர்கள் யாருக்கும் தெரியாமல் அஜீசை கடந்த 3 மாதங்களுக்கு முன்பு வெளி நாட்டுக்கு அனுப்பி வைத்து விட்டனர். இது மாணவியின் குடும்பத்தினருக்கு பேரதிர்ச்சியை கொடுத்தது.

இதற்கிடையே, இரு வீட்டாருக்கிடையே மட்டும் நடந்த இப்பிரச்சினை அரசல் புரசலாக வெளியே கசிந்தது. மாணவி கர்ப்பமடைந்ததை அறிந்த கொல்லங்கோடு சூசைபுரம்காலனியை சேர்ந்த ஜோஸ்(50) என்ற பால் வியாபாரி, மாணவியை மிரட்டினார். ‘நடந்த சம்பவங்கள் அனைத்தும் எனக்கு தெரியும், நீ கர்ப்பமடைந்திருப்பதை வெளியே சொல்லாமல் இருக்க வேண்டுமானால் என்னுடன் வா’ என அவரது வீட்டுக்கு அழைத்து சென்று அங்கு மாணவியை பலாத்காரம் செய்தார். தொடர்ந்து, பல முறை ஜோஸ் இவ்வாறு மிரட்டி காமஇச்சையை தீர்த்துக் கொண்டார்.

ஜோசின் மிரட்டல் எல்லை மீறவே மாணவி குளச்சல் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் மாணவியை ஏமாற்றி கற்பழித்த அஜீஸ், ஜோஸ் ஆகியோர் மீது குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமை தடுப்பு சிறப்பு சட்டம் 2012 மற்றும் கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளில் குளச்சல் அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

மாணவியின் கர்ப்பத்துக்கு காரணமான அஜீஸ் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு வெளிநாடு தப்பி சென்று விட்டதாக கூறப்படுவது உண்மை தானா? என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும், ஜோசை தேடி சென்ற போது அவர் குடும்பத்துடன் தலைமறைவாகி இருந்தார். ஜோசுக்கு மனைவி மற்றும் 1 மகன், 2 மகள்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இவரை பிடிக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இதற்கிடையே, பாதிக்கப்பட்ட மாணவி ஒரு காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளார். இன்று அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். நடந்த சம்பவங்கள் குறித்து மாணவியிடம் விலாவாரியாக போலீசார் கேட்டறிந்தனர்.

அப்போது நடந்த சம்பவங்களை அறிந்த வாலிபர்கள் பலர் தன்னிடம் அத்துமீறி நடந்ததாக கூறினார். இது குறித்து விசாரணை நடத்திய போலீசார் மாணவிக்கு தேவையான மருத்துவ சிகிச்சைகள் கிடைக்கவும், அவருக்கு மருத்துவ பரிசோதனைகள் நடத்தவும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வரதட்சணை கொண்டு வராத மனைவியை விஷம் வைத்துக் கொன்ற வக்கீல் கைது!!
Next post திண்டிவனம் அருகே கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவர்–மகனை கொன்ற பெண்!!