விபச்சார வழக்கில் சிக்கிய நடிகையின் பெற்றோரின் கோரிக்கை!!
‘என் மகளை எங்களிடம் ஒப்படையுங்கள் அவளுக்கு குடும்பத்தினர் அன்பு தேவைப்படுகிறது என்று விபசார வழக்கில் கைதான நடிகை சுவேதாவின் பெற்றோர் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
தமிழ், தெலுங்கு படங்களில் நடித்திருப்பவர் சுவேதா பாசு. சமீபத்தில் விபசார வழக்கில் கைதானார். குடும்பத்தை காப்பாற்றுவதற்காகவே விபசாரத்தில் ஈடுபட்டதாக அவர் வாக்குமூலம் அளித்திருந்தார்.
இதையடுத்து அவரை மகளிர் காப்பகத்துக்கு அனுப்பி வைத்தது ஐதராபாத் கோர்ட். ‘சுவேதா மீது மட்டும் பொலிசார் குற்றம் சுமத்தி இருக்கின்றனர்.
அவருடன் உல்லாசமாக இருக்கச் சென்ற தொழில் அதிபர்
யார் என்பதை வெளிப்படுத்த பொலிஸ் தயங்குவது ஏன்? என்று சுவேதாவுக்கு ஆதரவாக பல நடிகைகள் குரல் எழுப்பி உள்ளனர். ஆனாலும் சுவேதாவுக்கு உதவ அவரது குடும்பத்தினர் யாரும் முன்வராமல் மவுனமாக இருந்துவந்தனர்.
அவரை ஒதுக்கி வைப்பதுபோல் தனிமைப்படுத்தி வைத்திருந்தனர். தற்போது அவர்கள் தங்கள் மனதை மாற்றிக்கொண்டு சுவேதாவுக்கு ஆதரவு கரம் நீட்டி உள்ளனர்.
சுவேதாவின் பெற்றோர் ஐதராபாத் கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளனர். அதில்,‘சுவேதாவை எங்களிடம் ஒப்படையுங்கள். இந்த சூழலில் அவருக்கு எங்களின் அன்பு தேவைப்படுகிறது. அவரை பத்திரமாக நாங்கள் பார்த்துக்கொள்கிறோம் என்று குறிப்பிட்டுள்ளனர். இதுபற்றி கோர்ட் இன்னும் உத்தரவு எதுவும் பிறப்பிக்கவில்லை.
Average Rating