பிளஸ்-1 மாணவியை கடத்தி பலாத்காரம்: 5 குழந்தைகளின் தந்தை கைது!!

Read Time:2 Minute, 40 Second

10பொள்ளாச்சியில் உள்ள தோட்டத்து வீட்டில் தங்கியிருந்து கூலி வேலை செய்து வரும் தொழிலாளியின் மகள் அருகில் உள்ள பள்ளியில் பிளஸ்– 1 படித்து வருகிறார்.

பக்கத்து வீட்டில் தங்கியிருந்து கூலிவேலை செய்து வருபவர் தங்கையா (வயது 27). இவர் திண்டுக்கல் மாவட்டம் நந்தம்பரளி தேக்கம்பட்டி பகுதியை சேர்ந்தவர். இவருக்கு திருமணமாகி 5 குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில் பள்ளி மாணவியை பின் தொடர்ந்த தங்கையா மாணவியை காதலிப்பதாகவும் உன்னை 2–வது திருமணம் செய்துகொள்வதாகவும் ஆசைவார்த்தை கூறினார். தங்கையாவின் பேச்சில் மாணவி மயங்கினார்.

இதனை தனக்கு சாதகமாக்கிய தங்கையா மாணவியை பழனி, திண்டுக்கல் உள்ளிட்ட இடங்களுக்கு கடத்தி சென்றார். இதற்கு உடந்தையாக தங்கையாவின் நண்பர் செல்வமணி (32) இருந்தார். திண்டுக்கல்லில் தங்கியபோது மாணவியை தங்கையா பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிகிறது. தொடர்ந்து 3 நாட்கள் மாணவியை தனி அறையில் அடைத்து இந்த கொடூரம் நடந்தது.

இந்நிலையில் மாணவியின் பெற்றோர் மகளை காணவில்லை என்று ஆனைமலை போலீசில் புகார் செய்தனர். தகவல் அறிந்த தங்கையா மாணவியை அவரது உறவினர் வீட்டுக்கு பஸ்சில் அனுப்பி வைத்தார்.

மாணவியை மீட்ட பெற்றோர் இது குறித்து ஆனைமலை போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். மாணவியின் வாக்கு மூலத்தையடுத்து வால்பாறை டி.எஸ்.பி. சக்திவேல் உத்தரவின் பேரில் ஆனைமலை இன்ஸ்பெக்டர் விவேகானந்தன் தலைமையிலான தனிப்படை போலீசார் தங்கையா மற்றும் அவரது நண்பர் செல்வமணியை தீவிரமாக தேடி வந்தனர்.

நேற்று காலை திண்டுக்கல் பகுதியில் 2 பேரும் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலின்பேரில் அவர்களை மடக்கி கைது செய்தனர். கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட 2 பேரும் கோவை சிறையில் அடைக்கப்பட்டனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post எமி ஜாக்ஸன் அரை நிர்வாண போஸ்!!
Next post ஹன்சிகாவின் ஆசை!!