கள்ளக்காதலை கண்டித்ததால் தொழிலாளி கழுத்தை இறுக்கி கொலை: மனைவி–மாமியார் வெறிச்செயல்!!

Read Time:6 Minute, 16 Second

3376beec-7794-46ae-b816-4a48010193dc_S_secvpfசிதம்பரம் அருகே தீர்த்தாம்பாளையம் வெள்ளாற்றில் கடந்த 3–ந் தேதி காலை கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் கிள்ளை போலீசார் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் விசாரணை நடத்தியதில் ஆற்றில் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தவர் தஞ்சை மாவட்டம் பெரிய புதுப்பட்டினத்தை சேர்ந்த கட்டிட தொழிலாளி பரமசிவம் (51) என்பது தெரியவந்தது.

இதையடுத்து பிணத்தை பிரேத பரிசோதனை நடத்தி அதனை உறவினர்களிடம் ஒப்படைத்தனர். இதனைத் தொடர்ந்து பரமசிவத்தை கொலை செய்தவர்கள் யார்? எதற்காக கொலை செய்தார்கள்? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினார்கள்.

அப்போது பரமசிவத்தின் வீட்டில் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வந்த அருள் (28), ராஜா மற்றும் புதுவை டைல்ஸ் உரிமையாளர் ஆசைமணி ஆகிய 3 பேரும் சேர்ந்து கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 3 பேரையும் கைது செய்து போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர்.

விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தது. அதன் விவரம் வருமாறு:–

பரமசிவத்துக்கும், அவரது மனைவி அல்லி (32) என்பவருக்கும் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு நித்யா (14) என்ற மகள் உள்ளார். திருமணம் முடிந்து சில வருடங்களில் அல்லி வெளிநாட்டுக்கு வேலைக்கு சென்றார்.

அப்போது சென்னையை சேர்ந்த தொழில் அதிபர் ஒருவருடன் அல்லிக்கு பழக்கம் ஏற்பட்டது. அதன்பின்னர் அல்லி ஊர் திரும்பியவுடன் தனது மகளை சென்னைக்கு அழைத்து சென்று அங்கேயே தங்கி மகளை படிக்க வைத்து வந்தார். அவ்வப்போது சொந்த ஊருக்கு வந்து தனது தாய் நாகம்மையையும் (50), கணவர் பரமசிவத்தையும் பார்த்துவிட்டு செலவுக்கு பணம் கொடுத்து செல்வது வழக்கம்.

தற்போது அல்லி சொந்த ஊரில் புதிதாக வீடு கட்ட விரும்பினார். அதற்காக தனது தாயிடம் பணம் கொடுத்து வீடு கட்டும் பணி நடந்து வந்தது. வீடு கட்டிட வேலையில் வடகோவனூரை சேர்ந்த அருளும், ராஜாவும், ஈடுபட்டு வந்தனர்.

அப்போது பரமசிவத்தின் மாமியார் நாகம்மையுடன் அருளுக்கு கள்ளக்காதல் ஏற்பட்டது. இதனை அறிந்த பரமசிவம் மாமியார் நாகம்மையை கண்டித்து வந்தார். மேலும் இரவு மது குடித்துவிட்டு வந்து நாகம்மையை உனது மகள் போல நீயும் மோசமானவள் என்று தகாதவார்த்தைகளால் திட்டி வந்தார். இது அக்கம் பக்கத்தினருக்கு தெரிந்ததும் நாகம்மை அவமானம் அடைந்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து நாகம்மை சென்னையில் உள்ள தனது மகள் அல்லியிடம் கூறினார். இதைத்தொடர்ந்து பரமசிவத்தை கொன்றுவிட தாயும், மகளும் சதி திட்டம் தீட்டினர். நாகம்மையின் கள்ளக்காதலன் அருளிடம் ரூ. 3 லட்சம் கொடுத்து பரமசிவத்தை கொன்றுவிடுமாறு கூறினர்.

அதற்கான திட்டத்தையும் வகுத்து கொடுத்தனர். புதுவைக்கு சென்று கட்டிட பொருட்கள் வாங்க பரமசிவத்தை மினிவேனில் அழைத்து செல்லுமாறும், வழியில் அளவுக்கு அதிகமாக மது வாங்கி கொடுத்து பரமசிவம் மயக்க நிலையில் இருக்கும்போது அவரை கழுத்தை இறுக்கி கொன்றுவிடுமாறு அல்லி திட்டம் வகுத்து கொடுத்தார்.

அதன்படி கடந்த 2–ந் தேதி அருள் உள்பட 3 பேரும் பரமசிவத்தை அழைத்துக்கொண்டு ஒரு மினிவேனில் புதுவைக்கு புறப்பட்டனர். வழியில் அரசு டாஸ்மாக் கடை ஒன்றில் நிறுத்தி பரமசிவத்துக்கு அளவுக்கு அதிகமாக மது வாங்கி கொடுத்தனர். பின்னர் 4 பேரும் புதுவை நோக்கி புறப்பட்டு வந்தனர்.

அப்போது வழியில் சாலை எங்கும் மக்கள் நடமாட்டம் இருக்கவே பரமசிவத்தை அவர்களால் கொலை செய்ய முடியவில்லை. இரவு 9 மணியளவில் சிதம்பரம் அருகே தீர்த்தாம்பாளையம் வெள்ளாற்று அருகே வந்தபோது மக்கள் நடமாட்டம் இல்லாததால் பரமசிவம் முகத்தில் மயக்க மருந்து தடவிய கைக்குட்டையை வைத்தனர். அவர் மயங்கி விழுந்ததும் கழுத்தை நயிலான் கயிற்றால் இறுக்கி கொலை செய்து அதே கயிற்றால் கை, கால்களை கட்டி ஆற்றில் வீசிவிட்டு சென்றது தெரியவந்தது.

தற்போது அல்லியும் போலீஸ் வலையில் சிக்கி உள்ளதாக கூறப்படுகிறது. அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தலைமறைவாகிவிட்ட நாகம்மையை தேடி வருகிறார்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post காதலன், பால் வியாபாரியால் கற்பழிப்பு: பள்ளி மாணவிக்கு இன்று மருத்துவ பரிசோதனை!!
Next post விபச்சார வழக்கில் சிக்கிய நடிகையின் பெற்றோரின் கோரிக்கை!!