காதலன், பால் வியாபாரியால் கற்பழிப்பு: பள்ளி மாணவிக்கு இன்று மருத்துவ பரிசோதனை!!

Read Time:4 Minute, 25 Second

213fc766-3924-4f5c-b451-dd74cceb3f2d_S_secvpfகொல்லங்கோடு பகுதியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ராணுவ வீரரின் மகன் அஜிஸ் (வயது 23).

இவர் ஓட்டல் மேனேஜ்மெண்ட் படித்துள்ளார். வேலை கிடைக்காததால் அந்த பகுதியில் டாக்சி ஓட்டி வந்தார். இவர் மீது அதே பகுதியைச் சேர்ந்த பிளஸ்–1 மாணவி ஒருவர் குளச்சல் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் ஒரு பரபரப்பு புகார் கொடுத்தார்.

அதில், அஜிஸ் தன்னை திருமண ஆசைக்காட்டி கற்பழித்து விட்டதாகவும், கர்ப்பமானதும் அவர் மாயமாகி விட்டதாகவும், அவரை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறி இருந்தார்.

மைனர் பெண் கூறிய இந்த பரபரப்பு புகார் குறித்து போலீசார் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் உத்தரவுப்படி, தனிப்படை போலீசார் இந்த வழக்கை ரகசியமாக விசாரித்தனர்.

இதில், பிளஸ்–1 மாணவியை அஜிஸ் ஆசை வார்த்தைகள் கூறியும், டாக்சியில் அழைத்துச் சென்றும் உல்லாசமாக இருந்தது தெரிய வந்தது. மாணவி கர்ப்பமானதும் பெற்றோருக்கு தெரிந்து அவர்கள் அஜிஸ் வீட்டிற்கு சென்று நியாயம் கேட்டனர்.

அப்போது அஜிசுக்கு ஆதரவாக ஊரில் உள்ள சில பிரமுகர்கள் மாணவியின் பெற்றோரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மாணவிக்கு திருமண வயது வந்ததும், அவரை அஜிசுக்கு மணம் முடித்து வைப்பதாக உறுதி கூறினர்.

இதையடுத்து மாணவியின் பெற்றோர் சமரசம் அடைந்த நிலையில் அஜிஸ் திடீரென ஊரில் இருந்து மாயமாகி விட்டார். அவரை அஜிசின் பெற்றோரே வெளிநாட்டிற்கு அனுப்பி வைத்து விட்டதாகவும், அவருக்கு வேறு இடத்தில் திருமணத்திற்கு ஏற்பாடு நடப்பதாகவும், தகவல் வெளியானது.

இது ஒருபுறம் இருக்க அஜிஸ்–மாணவிக்கு இடையிலான தொடர்பை தெரிந்து கொண்ட சிலர் மாணவியை தவறான கண்ணோட்டத்தில் அணுகி அவருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தனர். குறிப்பாக கொல்லங்கோடு பகுதியைச் சேர்ந்த பால் வியாபாரி ஜோஸ் என்பவர் மாணவியை மிரட்டி கற்பழிக்கவும் செய்தார்.

அவர் அடிக்கடி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததையடுத்தே மாணவி மகளிர் போலீசாரை அணுகியதும், தனிப்படை போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.

இந்த தகவல் அறிந்த உயர் அதிகாரிகள் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த அஜிஸ் மற்றும் பால் வியாபாரி ஜோஸ் மீது வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட்டனர்.

மேலும் மாணவிக்கு தொந்தரவு கொடுத்த நபர்கள் யார்? யார்? அவர்கள் இப்போது எங்கு இருக்கிறார்கள்? என்ற பட்டியலை போலீசார் தயாரித்து வருகிறார்கள். இது கொல்லங்கோடு பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதற்கிடையே போலீசார் மாணவியை குழித்துறை மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அப்போது மாணவி பல்வேறு திடுக்கிடும் தகவல்களை கூறியதாக தெரிகிறது. அதன் பின்பு மாணவிக்கு மருத்துவ பரிசோதனை செய்து அறிக்கை தாக்கல் செய்யும்படி மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார். அதன்படி, போலீசார் இன்று மாணவியை ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து வந்தனர். அங்கு அவருக்கு மருத்துவ பரிசோதனைகள் நடக்கிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஹன்சிகாவின் ஆசை!!
Next post கள்ளக்காதலை கண்டித்ததால் தொழிலாளி கழுத்தை இறுக்கி கொலை: மனைவி–மாமியார் வெறிச்செயல்!!