கள்ளக்காதலியை சந்திக்க சென்ற வக்கீல் வெட்டிக்கொலை!!

Read Time:3 Minute, 56 Second

2546116e-f580-4da8-8919-e93c30ed4cb6_S_secvpf (1)சங்கராபுரம் போலீஸ் லைன் தெருவை சேர்ந்தவர் ராமசாமி. இவரது மகன் சண்முகம் (வயது 37). இவர் சங்கராபுரம் கோர்ட்டில் வக்கீலாக பணிபுரிந்து வந்தார். இவருக்கு திருமணமாகி ஆஷ்மா (32) என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

இதற்கிடையே சண்முகம் சங்கராபுரத்தை சேர்ந்த தண்டபாணி என்பவரின் மனைவி கோமதி ராணியுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்தார். கோமதி ராணிக்கு தியாகதுருகம் அருகே உதயமாம்பட்டில் தனியாக வீடு வாடகை எடுத்து கொடுத்து இருந்தார். சண்முகம் அங்கு அடிக்கடி சென்று கோமதி ராணியை சந்தித்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று மாலை சண்முகம் கள்ளக்குறிச்சியில் தனது நண்பரை பார்த்து பேசிவிட்டு மோட்டார் சைக்கிளில் கள்ளக்காதலி வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார். பிரதிவிமங்கலம் ஏரிக்கரை ரோட்டில் வந்து கொண்டிருந்தபோது மோட்டார் சைக்கிளில் பின் தொடர்ந்து வந்த 4 பேர் கொண்ட கும்பல் திடீரென சண்முகத்தை வழிமறித்தது.

பின்னர் அந்த கும்பல் சண்முகத்தின் முகத்தில் மிளகாய் பொடியை தூவி அவரை சரமாரியாக அரிவாளால் வெட்டிவிட்டு தப்பி ஓடிவிட்டது. இதில் சம்பவ இடத்திலேயே வக்கீல் சண்முகம் ரத்த வெள்ளத்தில் பிணமானார்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் தியாகதுருகம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

சண்முகத்தின் கள்ளக்காதலி கோமதி ராணியின் கணவன் தண்டபாணி கடந்த 2 ஆண்டுக்கு முன்பு வெட்டி கொலை செய்யப்பட்டார். கள்ளக்காதலுக்கு தண்டபாணி இடையூறாக இருந்ததால் அவரை சண்முகம் தனது கள்ளக்காதலி கோமதி ராணியுடன் சேர்ந்து வெட்டி கொலை செய்து பிணத்தை சாக்கு மூட்டையில் கட்டி வீசினார்.

இந்த வழக்கு நிலுவையில் உள்ளது. இதுபோல் கடந்த ஆண்டு சங்கராபுரம் பேரூராட்சி தலைவர் முனிசாமி கொலை செய்யப்பட்ட வழக்கு, மேலும் ஒரு கொலை வழக்கிலும் வக்கீல் சண்முகத்துக்கு தொடர்பு உள்ளது.

எனவே வக்கீல் சண்முகம் இந்த 3 கொலை காரணமாக கொலை செய்ப்பட்டு இருக்கலாமா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் கணவனை கொன்றதுபோல் வக்கீல் சண்முகத்தை கொல்ல கள்ளக்காதலி கோமதிராணி கூலிப்படையை ஏவி இருக்கலாமா? என்ற சந்தேகமும் போலீசாருக்கு ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து கள்ளக்காதலி கோமதி ராணியிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். சந்தேகத்தின் பேரில் மேலும் 8 பேரையும் பிடித்து விசாரித்து வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சோளிங்கர் அருகே சிறுமியை கடத்தி பலாத்கார முயற்சி!!
Next post சிறுமியை கற்பழித்து கருவை கலைத்த முதியவருக்கு 22 ஆண்டு சிறை!!