பள்ளியில் மாணவர்களை மது அருந்த வைத்த ஆசிரியர்கள்: ஜார்கண்டில் பரபரப்பு சம்பவம்!!
ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள பள்ளி ஒன்றில் பள்ளியில் தங்கியிருக்கும் மாணவர்களை மது அருந்த வைத்த சம்பவத்தை மக்கள் சுதந்திரத்திற்கான பொது அமைப்பை சேர்ந்த ஐவர் குழு வெளியுலகிற்கு தெரிவித்துள்ளது.
இது அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அம்மாணவர்களுக்கு பாலியல் தொடர்பான படங்களும் காண்பிக்கப்பட்டதாக மக்கள் சுதந்திரத்திற்கான பொது அமைப்பை சேர்ந்த சுரேஷ் மன்ஹாஸ் குற்றம் சாட்டினார். இக்குற்றச்சாட்டை குறிப்பிட்ட பள்ளியின் முதல்வர் நியாயப்படுத்தினார். அவர் கூறுகையில், இங்குள்ள கிராமங்களில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் உள்பட அனைத்து மக்களும் மது அருந்துவார்கள் என தெரிவித்துள்ளார்.
இது குறித்து மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரியை சந்தித்து இக்குழுவினர் முறையிட்ட போது, அப்பள்ளிக்கு முழுமையான கண்காணிப்பாளர் இல்லாததால், நீண்ட நாளாக அங்கு பணிபுரியும் கானோரி மஹ்தோவிடம் அதன் நிர்வாகம் ஒப்படைக்கப்பட்டது என தெரிவித்தார். மாணவர்களும், பி.யூ.சி.எல். குழுவினரும் மஹ்தோ மீது தான் குற்றஞ்சாட்டினர். ஆனால் மஹ்தோவோ தான் இவ்விவகாரத்தில் பலிகடா ஆக்கப்பட்டுவிட்டதாக தெரிவித்துள்ளார்.
எனினும் இது குறித்து மாநில அரசு தீவிர விசாரணை நடத்தி தவறு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அம்மாநில மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
Average Rating