நடிகையுடன் இருந்த தொழிலதிபர் யார்? கிளரும் மகளிர் அமைப்பு!!

Read Time:2 Minute, 19 Second

0042 (1)தமிழில் கருணாசுடன் சந்தமாமா படத்தில் நடித்துள்ள ஸ்வேதா பாசு, தெலுங்கில் மகடு படத்தில் சிறப்பாக நடித்ததற்காக தேசிய விருது வாங்கியுள்ளார்.

மேலும் சில படங்களில் நடித்துள்ள ஸ்வேதா பாசு, ஐதராபாத்தில், பாலியல் தொழிலில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டார். அவரை 2 மாதங்கள் மகளிர் காப்பகத்தில் தங்கி இருக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தற்போது அவர் தற்போது ஐதராபாத்தில் உள்ள மகளிர் காப்பகத்தில் தங்கியுள்ளார். பணம் இல்லாததால் பாலியல் தொழிலில் ஈடுபட்டதாக கூறிய ஸ்வேதா பாசு தற்போது மிகவும் கவலையுடன் உள்ளார். தனது வாழ்க்கை திசைமாறியதை நினைத்து வேதனைப்படுவதாகவும், சாப்பிட மறுத்துவருவதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் மகளின் நிலை கண்டு கலங்கியுள்ள ஸ்வேதா பாசுவின் பெற்றோர், தங்களிடம் ஸவேதா பாசுவை ஒப்படைக்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளனர்.

அந்த மனுவில் “சுவேதாவை எங்களிடம் ஒப்படையுங்கள். மனரீதியாக மிகவும் பாதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மனநிலை பாதிக்கும் அபாயமும் இருக்கிறது. இந்த சூழலில் அவளுக்கு எங்கள் அன்பு தேவை. அவளை எங்களிடம் ஒப்படையுங்கள் நாங்கள் அவளை பத்திரமாக பார்த்துக் கொள்கிறோம்” என்று கூறியுள்ளனர்.

இந்த மனுமீதான விசாரணை வருகிற 15ந் திகதி விசாரணைக்கு வருகிறது. இதற்கிடையில் ஸ்வேதா பாசுவுடன் இருந்த தொழிலதிபர் யார் என்பதையும் பொலிசார் வெளியிட வேண்டும் என்று ஆந்திராவில் மகளிர் அமைப்பினர் வலியுறுத்தியுள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post டெல்லியில் கடத்தல் நாடகமாடி குடும்பத்தாரிடம் ரூ.2 லட்சம் பறித்த வாலிபர் கைது!!
Next post இளம்பெண் தீக்குளித்து சாவு: கணவரிடம் ஆர்.டி.ஓ. விசாரணை!!