மனைவியை கட்டிப்போட்டு தங்கையை வல்லுறவு செய்த கணவன் கைது!!
Read Time:1 Minute, 5 Second
மனைவியை கட்டிப்போட்டு மனைவியின் 14 வயது தங்கையை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாகக் கூறப்படும் கணவர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஆனமடு பொலிஸார் தெரிவித்தனர்.
ஆனமடு – பெரமாகுத்துவ பகுதியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான 28 வயதுடைய நபரே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கணவர் தன்னை கட்டிப்போட்டு தங்கையை பலாத்காரமாக பாலியல் வல்லுறவு புரிந்ததாக மனைவி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
பாதிக்கப்பட்ட சிறுமி ஆனமடு வைத்தியசாலையில் வைத்திய பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் நீதிமன்றில் ஆஜர் செய்யப்படவுள்ளதாக ஆனமடு பொலிஸார் தெரிவித்தனர்.
Average Rating