திரைப்படத்தில் இடம்பெறுவது போல் பெண் கடத்தல்: நால்வர் சிக்கலில்!!

Read Time:1 Minute, 42 Second

82827348711f18b0e-3344-4e9e-ab6a-8b18ec2ceb08_S_secvpfஏழு வருடங்களாக காதலித்த பெண்ணொருவரை திருகோணமலையில் இருந்து பருத்தித்துறைக்கு கடத்திச் சென்ற நான்கு பேரை பதவியா பொலிஸார் கைது செய்துள்ளனர்.

யாழ்ப்பாணம் பருத்தித்துறையைச் சேர்ந்த ஒருவர் திருகோணமலை உவர்மலை பகுதியைச் சேர்ந்த பெண்ணொருவரையே ஏழு வருடங்களாக காதலித்து வந்துள்ளார். காதலித்த பெண்ணின் சம்மதத்துடன் வேன் ஒன்றில் யாழ்ப்பாணம் பருத்தித்துறைக்கு கடத்திச் சென்றபோது பெண்ணின் தந்தை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு முறையிட்டுள்ளார்.

இதனையடுத்து பொலிஸ் நிலையங்களுக்கு தகவல் வழங்கப்பட்டு பதவியா பொலிஸார் வேனை மறித்து சோதனையிட்டபோது பெண்ணை மீட்டதுடன் கடத்திச் சென்ற நான்கு பேரையும் கைது செய்து செய்தனர்.

கடத்தலுடன் தொடர்புடைய நான்கு சந்தேகநபர்களையும் பொலிஸார் திருகோணமலை நீதிமன்றில் ஞாயிற்றுக்கிழமை ஆஜர்படுத்தியபோது இம்மாதம் 17ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் கயான் கமகே உத்தரவிட்டார்.

மேலதிக விசாரணைகளை பதவியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post குடும்பம் நடத்த மறுப்பு: மனைவி புகாரால் கணவர் கைது!!
Next post ஆரல்வாய்மொழி அருகே திருமணம் நடக்க இருந்த மணப்பெண் காதலனுடன் ஓட்டம்!!