திருமண மண்டபத்தில் மானேஜர் தற்கொலை!!
Read Time:1 Minute, 1 Second
கொடுங்கையூர் வெங்கடேஸ்வரா நகர், 2–வது தெருவை சேர்ந்தவர் சங்கர் (35). இவர் வியாசர்பாடி சர்மா நகர் எருக்கஞ்சேரி நெடுஞ்சாலையில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் மானேஜராக வேலை பார்த்து வந்தார். நேற்று மாலை அவர் 2–வது மாடியில் உள்ள அறையில் தூக்கு போட்டுக் கொண்டார்.
அவரை உறவினர்கள் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். உடனே அவரது உடலை வீட்டுக்கு எடுத்து சென்று இறுதிச் சடங்கு செய்தனர்.
இது குறித்து எம்.கே.பி.நகர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இன்ஸ்பெக்டர் பாலமுரளி விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்.
Average Rating