குடும்பம் நடத்த மறுப்பு: மனைவி புகாரால் கணவர் கைது!!!

Read Time:4 Minute, 14 Second

837ead24-6967-4753-a247-7fb226c25828_S_secvpfகொல்லங்கோடு பகுதியை சேர்ந்த பிளஸ்–1 மாணவியை அதே பகுதியை சேர்ந்த அஜிஸ் (வயது 23) என்பவர் காதலிப்பது போல நடித்து பல முறை கற்பழித்தார்.

இதனால் மாணவி கர்ப்பமானதும் அஜிசிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கூற, அவர் வெளிநாடு தப்பி ஓடி விட்டார். மாணவி கர்ப்பமானதை அறிந்த கொல்லங்கோடு சூசையப்பர் காலனியை சேர்ந்த பால் வியாபாரி ஜோஸ் என்பவரும் மாணவியை மிரட்டி கற்பழித்துள்ளார்.

இதுதொடர்பாக மாணவி கொடுத்த புகாரின்பேரில் அஜிஸ், ஜோஸ் ஆகியோர் மீது குளச்சல் அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தலைமறைவான ஜோசை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, மாணவி கற்பழிப்பு வழக்கில் அரசியல் பிரமுகர் ஒருவருக்கும் தொடர்பு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அஜிஸ் மாணவியை காதல் வலையில் வீழ்த்தி ஊர், ஊராக சுற்றிய போது காரில் வைத்து கற்பழித்துள்ளார். சில முறை அதே பகுதியை சேர்ந்த தனது நண்பரான அரசியல் பிரமுகர் ஒருவரின் வீட்டில் வைத்தும் மாணவியை பலாத்காரம் செய்துள்ளார். இதை அறிந்த அரசியல் பிரமுகரும் மாணவியை மிரட்டி அனுபவித்துள்ளார்.

மாணவியின் குடும்பம் ஏழ்மை நிலையில் இருந்ததை அனைவரும் வாய்ப்பாக பயன்படுத்திக் கொண்டதால் பிரச்சினை வெளியே தெரிய வில்லை. மாணவி கர்ப்பமானதும் அவரது குடும்பத்தினர் விசாரித்த போது தான் நடந்த கொடுமைகள் அவர்களுக்கு தெரியவந்தது. அவர்கள் அஜிஸ் குடும்பத்தினரிடம் பேசச் சென்ற போது மாணவி கர்ப்பமான விஷயம் அரசல் புரசலாக வெளியே கசிந்துள்ளது. இதை பயன்படுத்தி இவ்விவகாரத்தில் உள்ளே நுழைந்த பால் வியாபாரி ஜோஸ் முதலில் மாணவிக்கு ஆதரவாக அஜிஸ் குடும்பத்தினரிடம் பேசினார். ஒருகட்டத்தில் அவரும் மாணவியை மிரட்டி தனது காமஇச்சையை தீர்த்துக் கொண்டது அம்பலமாகி உள்ளது.

மேலும், மாணவி கர்ப்பமானதுமே அவரது குடும்பத்தினர் போலீஸ் நிலையம் செல்ல முடிவு செய்தனர். அப்போது மாணவியை கற்பழித்த அரசியல் பிரமுகரும், அஜிசின் உறவினரான மற்றொரு அரசியல் பிரமுகரும் சேர்ந்து அவர்களிடம் நைசாக பேசி உள்ளனர்.

அஜிஸ் குடும்பத்தினரிடம் பேசி அவருடன் சேர்த்து வைக்கிறோம் என அவர்கள் வாக்குறுதி அளித்ததை நம்பி மாணவி அமைதியாக இருந்துள்ளார். ஆனால் மாறாக அவர்கள் அஜிஸ் வீட்டாருடன் பேசி அவரை வெளிநாட்டுக்கு அனுப்பி வைத்து விட்டனர். அதன்பின்னர் தான் தான் மீண்டும் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த மாணவி தன்னந்தனியாக போலீஸ் நிலையம் சென்றுள்ளார்.

தற்போது கோர்ட்டு உத்தரவின்பேரில் மாணவிக்கு மருத்துவ பரிசோதனை நடத்துவதற்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் தங்க வைக்கப்பட்டுள்ளார். அங்கு இன்று மாணவிக்கு மருத்துவ பரிசோதனை நடக்கிறது. மாணவியின் பாதுகாப்புக்காக 2 பெண் போலீசார் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post காதல் திருமணம் செய்த இளம்பெண் தற்கொலை: ஆர்.டி.ஓ. விசாரணை!!
Next post திருமண மண்டபத்தில் மானேஜர் தற்கொலை!!