மகளை கிண்டல் செய்ததை தட்டி கேட்ட தந்தை மீது தாக்குதல்: வாலிபர் கைது!!
Read Time:1 Minute, 16 Second
நந்தம்பாக்கம் மணபாக்கம் ஜே.ஜே. நகரை சேர்ந்தவர் இசக்கிமுத்து (34) கூலி தொழிலாளி. இவரது எதிர் வீட்டை சேர்ந்தவர் ராயப்பா (68). இவரது மகள் குணசீலி.
நேற்று மாலை இசக்கிமுத்து மது குடித்து விட்டு போதையில் வீட்டுக்கு வந்தார். அப்போது குணசீலி வீட்டின் வெளியே நின்று கொண்டு இருந்தார்.
அவரை பார்த்து இசக்கிமுத்து பாட்டு பாடி கிண்டல் செய்தார். இதை ராயப்பா தட்டி கேட்டார். அப்போது ராயப்பாவுக்கும் இசக்கி முத்துக்கும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த இசக்கிமுத்து மது பாட்டிலை உடைத்து அதை வைத்து ராயப்பாவை குத்தினார். இதில் அவர் படுகாயம் அடைந்தார். உடனே ராயப்பாவை சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.
இது குறித்து நந்தம்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து இசக்கி முத்துவை கைது செய்தனர்.
Average Rating