மகளை கிண்டல் செய்ததை தட்டி கேட்ட தந்தை மீது தாக்குதல்: வாலிபர் கைது!!

Read Time:1 Minute, 16 Second

c8c61bc4-8e41-4aa7-bb75-58d2d8c26677_S_secvpfநந்தம்பாக்கம் மணபாக்கம் ஜே.ஜே. நகரை சேர்ந்தவர் இசக்கிமுத்து (34) கூலி தொழிலாளி. இவரது எதிர் வீட்டை சேர்ந்தவர் ராயப்பா (68). இவரது மகள் குணசீலி.

நேற்று மாலை இசக்கிமுத்து மது குடித்து விட்டு போதையில் வீட்டுக்கு வந்தார். அப்போது குணசீலி வீட்டின் வெளியே நின்று கொண்டு இருந்தார்.

அவரை பார்த்து இசக்கிமுத்து பாட்டு பாடி கிண்டல் செய்தார். இதை ராயப்பா தட்டி கேட்டார். அப்போது ராயப்பாவுக்கும் இசக்கி முத்துக்கும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த இசக்கிமுத்து மது பாட்டிலை உடைத்து அதை வைத்து ராயப்பாவை குத்தினார். இதில் அவர் படுகாயம் அடைந்தார். உடனே ராயப்பாவை சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

இது குறித்து நந்தம்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து இசக்கி முத்துவை கைது செய்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஆரல்வாய்மொழி அருகே திருமணம் நடக்க இருந்த மணப்பெண் காதலனுடன் ஓட்டம்!!
Next post காதல் திருமணம் செய்த இளம்பெண் தற்கொலை: ஆர்.டி.ஓ. விசாரணை!!