மேற்கு வங்காளத்தில் 45 வயது பெண் கற்பழிப்பு: 3 பேர் கைது!!
Read Time:1 Minute, 3 Second
மேற்கு வங்காள மாநிலத்தில் 45 வயது பெண்ணை 3 பேர் கொண்ட கும்பல் கடத்தி கற்பழித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள பசிர்காட் என்ற இடத்தில் 45 வயதுடைய ஒரு பெண் தன் வீட்டின் முன் நின்றிருந்தார்.
அப்போது அந்த வழியாக வந்த ஒரு கும்பல் அவரை கடத்தி மறைவான இடத்திற்கு கொண்டு சென்று கற்பழித்துள்ளது. பின்னர், அவர் வீட்டின் முன் தூக்கி வீசிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். இந்த சம்பவம் நேற்று முன்தினம் நடந்துள்ளது.
இத்தகவல் அறிந்து அந்த பெண்ணின் உறவினர்கள் போலீசில் புகார் தெரிவித்தனர். இதன் அடிப்படையில் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
Average Rating