காதலன், வியாபாரியால் பலாத்காரம்: பிளஸ்–1 மாணவிக்கு பிறந்த குழந்தைக்கு தீவிர சிகிச்சை!!

Read Time:2 Minute, 35 Second

ff7357a1-9e9d-4fb8-9de8-9d65628ba0bc_S_secvpfகொல்லங்கோடு பகுதியை சேர்ந்த பிளஸ்–1 மாணவியை கற்பழித்த அவரது காதலன் அஜிஸ் மற்றும் அதே பகுதியை சேர்ந்த பால் வியாபாரி ஜோஸ் ஆகியோர் மீது குளச்சல் அனைத்து மகளிர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே, மருத்துவ பரிசோதனைக்காக ஆசாரி பள்ளம் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்த மாணவிக்கு நேற்று 7 மாத குறை பிரசவத்தில் ஆண் குழந்தை பிறந்தது. உடனே குழந்தையை ‘இன்குபேட்டர்’ கருவியில் வைத்து பராமரித்து வருகின்றனர்.

மாணவிக்கும் தேவையான சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது. குழந்தையின் உடல்நிலை மோசமாக இருப்பதால் தொடர்ந்து இன்குபேட்டரில் வைத்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

மருத்துவ பரிசோதனை நடத்துவதற்கு முன்பாகவே மாணவிக்கு குழந்தை பிறந்துள்ளதால் இன்னும் சில நாட்கள் கழித்து தான் மருத்துவ பரிசோதனை நடத்தப்படும் என தெரிகிறது. மாணவியை அவரது காதலன் மட்டுமின்றி வியாபாரி மற்றும் அரசியல் பிரமுகர் ஒருவரும் பலாத்காரம் செய்துள்ளதாக கூறப்படுவது போலீசாருக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

எனவே மாணவியின் கர்ப்பத்துக்கு காரணமானவர் யார்? என்பதை அறிய டி.என்.ஏ. பரிசோதனை அவசியம் என போலீசார் கருதுகின்றனர். இதற்காக மாணவியையும், குழந்தையையும் இன்னும் ஓரிரு நாட்களில் மதுரை அழைத்து சென்று பரிசோதனைகள் நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர்.

இதுதொடர்பாக உயர் போலீஸ் அதிகாரிகளின் ஒப்புதல் பெற்று அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ள போலீசார் முயன்று வருகின்றனர்.

மேலும், தலைமறைவாக உள்ள வியாபாரி ஜோஸ் கேரளாவில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. எனவே அவரை பிடிக்க ஒரு தனிப்படை கேரளா செல்ல உள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post காதல் திருமணம் செய்த குடும்பம் ஊரைவிட்டு ஒதுக்கிவைப்பு: கலெக்டர் அலுவலகத்தில் புகார்!!
Next post பள்ளிக்கு போக சொல்லி பெற்றோர் வற்புறுத்தியதால் கடத்தல் நாடகமாடிய மாணவன்!!