காதல் திருமணம் செய்த குடும்பம் ஊரைவிட்டு ஒதுக்கிவைப்பு: கலெக்டர் அலுவலகத்தில் புகார்!!
பள்ளிப்பட்டு அருகே உள்ள ஜனகராஜகுப்பத்தை சேர்ந்தவர் போதும். இவர் குடும்பத்தை சேர்ந்த சிறுவர், சிறுமிகள், பெண்கள் மற்றும் உறவினர்கள் உள்பட 20 பேருடன் திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தார்.
அதில் கூறி இருப்பதாவது:–
எனது மகன் ஆனந்தகுமார். இவர் ராகவநாயுடுகுப்பம் கிராமத்தை சேர்ந்த பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஊரில் உள்ள முக்கியஸ்தர்கள் எங்களை ஊரை விட்டு ஒதுக்கி வைத்துள்ளனர்.
மேலும் எங்களின் வீடு, அதே பகுதிகளில் உள்ள எங்கள் உறவினர்களின் வீடுகளை அடித்து உடைத்துள்ளனர். ரூ.3 லட்சம் மதிப்பிலான பொருட்களை சேதப்படுத்தினர்.
இது குறித்து ஆர்.கே. பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே இது குறித்து மாவட்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுத்து எங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Average Rating