நாங்குநேரி அருகே பள்ளி வகுப்பறையில் மாணவியிடம் சில்மிஷம்: தலைமை ஆசிரியர் கைது!!

Read Time:5 Minute, 5 Second

bfc75092-3bd1-4fa1-9683-8bccc45414dc_S_secvpfநெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே சூரங்குடி கிராமம் உள்ளது. இங்கு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியின் தலைமை ஆசிரியராக குமரி மாவட்டம் அஞ்சுகிராமம் அருகே உள்ள இரவிபுதூர் பகுதியை சேர்ந்த சுப்பிரமணியன் (எ) மூர்த்தி (வயது53) என்பவர் பணியாற்றி வருகிறார்.

தினமும் பள்ளி முடிந்ததும் மாலையில் ஏதாவது ஒரு மாணவி அனைத்து வகுப்பறைகளையும் பூட்டி விட்டு அந்த சாவியை அருகே உள்ள வீட்டில் ஒப்படைக்க வேண்டும் என்று தலைமை ஆசிரியர் சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

அதன்படி தினமும் வகுப்பறைகளை பூட்டி விட்டு சாவியை மாணவிகள் கொடுத்து வந்துள்ளனர். கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு தலைமை ஆசிரியர் சுப்பிரமணியன், 5–ம் வகுப்பு படித்து வரும் அதே பகுதியை சேர்ந்த கவிதா (11) (பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது) என்ற மாணவியை அழைத்து இனிமேல் நீதான் வகுப்பறைகளை பூட்டி சாவியை அருகில் உள்ள வீட்டில் ஒப்படைக்க வேண்டும் என கூறியுள்ளார்.

அதன்படி மாணவி கவிதா சக மாணவ– மாணவிகள் அனைவரும் சென்ற பிறகு வகுப்பறைகளை பூட்டி கொண்டிருந்த போது அங்கு வந்த தலைமை ஆசிரியர் சுப்பிரமணியன் மாணவியிடம் ‘சில்மிஷத்தில்’ ஈடுபட்டுள்ளார்.

அப்போது பயந்து அழ தொடங்கிய மாணவியிடம் சுப்பிரமணியன் இதுபற்றி பெற்றோரிடமோ அல்லது வெளியில் யாரிடமாவது கூறினால் உன்னை பெயிலாக்கி விடுவேன் என மிரட்டியுள்ளார்.

இதனால் பயந்த மாணவி கவிதா தலைமை ஆசிரியர் குறித்து யாரிடமும் கூறாமல் இருந்துள்ளார். இதை பயன்படுத்தி கொண்ட சுப்பிரமணியன் கடந்த ஒரு மாதமாக இது போன்று மாணவியை மிரட்டி அடிக்கடி சில்மிஷத்தில் ஈடுபட்டு வந்துள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு மாணவியிடம் சில்மிஷம் செய்து கொண்டிருந்த போது அதே பள்ளியில் படிக்கும் மாணவர்கள் பார்த்து விட்டனர். இதை பார்த்த சுப்பிரமணியன் அந்த மாணவர்களையும் அழைத்து இதுபற்றி வெளியில் கூறினால் பெயிலாக்கி விடுவேன் என மிரட்டியுள்ளார்.

இந்த நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாணவி கவிதாவுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. மேலும் அவர் தொடர்ந்து அழுது கொண்டே இருந்தார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த பெற்றோர் மாணவியிடம் ஏன் அழுகிறாய்? என கேட்ட போது கவிதா தனது பெற்றோரிடம் தலைமை ஆசிரியர் சுப்பிரமணியன் தன்னை சில்மிஷம் செய்தார் என கூறினார்.

இதை கேட்டு பேரதிர்ச்சியடைந்த பெற்றோர் சற்றும் தாமதிக்காமல் உடனடியாக மகளுக்கு நடந்த இந்த சம்பவம் குறித்து நாங்குநேரி அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர். புகாரில் தனது மகளிடம் தவறாக நடந்த தலைமை ஆசிரியர் சுப்பிரமணியன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி இருந்தனர்.

இதையடுத்து நேற்று மாலை இன்ஸ்பெக்டர் நாககுமாரி தலைமையிலான போலீசார் சம்பந்தப்பட்ட பள்ளிக்கு சென்று அங்கு வகுப்பறையில் இருந்த சுப்பிரமணியனை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். பின்னர் அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் மாணவியிடம் சில்மிஷம் செய்தது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமை ஆசிரியர் சுப்பிரமணியனை கைது செய்து பாளையில் சிறையில் அடைத்தனர். மேலும் மாணவி கவிதா மருத்துவ பரிசோதனைக்காக பாளை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் நெல்லை மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தாயின் கள்ளக் காதலனை அடித்துக் கொன்ற வாலிபருக்கு 10 ஆண்டு சிறை!!
Next post காதல் திருமணம் செய்த குடும்பம் ஊரைவிட்டு ஒதுக்கிவைப்பு: கலெக்டர் அலுவலகத்தில் புகார்!!