நித்யானந்தாவுக்கு நடத்தப்பட்ட ஆண்மை பரிசோதனை அறிக்கை சிஐடி போலீசிடம் ஒப்படைப்பு!!
Read Time:55 Second
கடந்த 8-ந் தேதி பெங்களூர் விக்டோரியா ஆஸ்பத்திரியில் நித்யானந்தா சாமியாருக்கு 7 பேர் கொண்ட டாக்டர்கள் குழுவினர் 5½ மணி நேரம் ஆண்மை பரிசோதனை நடத்தினார்கள்.
ஆண்மை பரிசோதனை செய்யப்பட்ட அறிக்கையை சி.ஐ.டி. போலீஸ் அதிகாரியிடம், டாக்டர் துர்கன்னா நேற்று இரவு வழங்கினார். ஆனால் அறிக்கை பற்றிய எந்த தகவலையும் வெளியே தெரிவிக்க டாக்டர் துர்கன்னா மறுத்து விட்டார்.
மேலும் அறிக்கை தயாரித்த டாக்டர்கள் பற்றி வெளியான தவறான தகவல்கள் உண்மை இல்லை என்று டாக்டர் துர்கன்னா திட்டவட்டமாக தெரிவித்தார்.
Average Rating