அசாமில் இளம்பெண் கற்பழிப்பு: காதலன் உள்பட 8 பேர் வெறிச்செயல்!!

Read Time:1 Minute, 43 Second

a060ff1a-75b2-4690-8cf2-76d35203cff4_S_secvpf (1)அசாமின் நல்பாரி மாவட்டத்தை சேர்ந்த 25 வயது இளம்பெண் ஒருவரும், காம்ரப் மாவட்டம் ராங்கியா அருகே உள்ள வாலிபர் ஒருவரும் கடந்த 5 மாதங்களாக செல்போன் மூலம் பழகி வந்தனர். அந்த வாலிபரை காதலித்து வந்த இளம்பெண், அவரை பார்ப்பதற்காக ராங்கியாவுக்கு வந்தார்.

அங்குள்ள ஒரு சினிமா தியேட்டரில் இருவரும் சந்தித்துக்கொண்டனர். அப்போது இளம்பெண்ணிடம் தனது பெயர் ராகுல் தாஸ் என வாலிபர் அறிமுகப்படுத்திக்கொண்டார். ஆனால் அவரது உண்மையான பெயர் பக்ருதின் அலி ஆகும். பின்னர் அந்த பெண்ணை வீட்டில் கொண்டு விடுவதாக கூறி தன்னுடன் அழைத்துச் சென்ற அவர், அருகே உள்ள பள்ளி கட்டிடத்துக்கு கூட்டிச் சென்றார்.

அங்கு, ஏற்கனவே தயாராக இருந்த அவரது நண்பர்கள் 7 பேரும், பக்ருதீன் அலியும் சேர்ந்து இளம்பெண்ணை மாறி மாறி கற்பழித்தனர். இதனால் கூச்சலிட்ட இளம்பெண்ணின் அழுகுரல் கேட்டு, அக்கம்பக்கத்தினர் அங்கு விரைந்து வந்தனர். அவர்கள் 3 இளைஞர்களை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். எனினும் பக்ருதீன் அலியும் மேலும் 4 பேரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். அவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post திருமண மண்டபத்தில் மானேஜர் தற்கொலை!!
Next post நித்யானந்தாவுக்கு நடத்தப்பட்ட ஆண்மை பரிசோதனை அறிக்கை சிஐடி போலீசிடம் ஒப்படைப்பு!!