காசிமேட்டில் கஞ்சா விற்ற கணவன்–மனைவி கைது: 1½ கிலோ கஞ்சா பறிமுதல்!!
Read Time:1 Minute, 4 Second
காசிமேடு விநாயகபுரத்தில் ஒரு வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்து விற்கப்படுவதாக காசிமேடு போலீசாருக்கு தகவல் வந்தது. இதைத் தொடர்ந்து நேற்று மாலை இன்ஸ்பெக்டர் ஆனந்தராஜ் தலைமையில் விநாயகபுரத்தில் போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது ஒரு வீட்டில் சிறுசிறு பொட்டலங்களாக 1½ கிலோ கஞ்சா சிக்கியது. இது தொடர்பாக வீட்டின் உரிமையாளர் முத்துவேல் அவரது மனைவி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். விசாரணையில் அவர்கள் இருவரும் கஞ்சாவை வீட்டில் பதுக்கி வைத்து விற்றது தெரியவந்தது. பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவின் மதிப்பு ரூ.50 ஆயிரம் ஆகும்.
இது குறித்து காசிமேடு போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
Average Rating