கள்ளக்குறிச்சி அருகே கள்ளக்காதலனுடன் சேர்ந்து மகளை தாக்கிய தாய்!!
கள்ளக்குறிச்சயை அடுத்த கல்வராயன்மலை அருகே மோட்டு வளைவு பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ், விவசாயி. இவரது மனைவி சாந்தகுமாரி (வயது 27). இவரது தந்தை ராமன் கடந்த 19 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார்.
இந்த நிலையில் சம்பவத் தன்று சாந்தகுமாரி அதே பகுதியில் வசிக்கும் தனது தாய் ராணியிடம் சென்று குடும்ப சொத்தில் தனக்கு பாகம் உள்ளதால் அதனை பிரித்து கொடுக்குமாறு கேட்டார். ஆனால் ராணி சொத்தை பிரித்து தர மறுத்தார்.
இதனால் அவர்களிடையே வாய் தகராறு ஏற்பட்டு வாக்குவாதம் முற்றியது. இதில் ஆத்திரம் அடைந்த ராணி அதே பகுதியை சேர்ந்த தனது கள்ளக்காதலனான தேவராஜ் (45) என்பவருடன் சேர்ந்து சாந்தகுமாரியை தாக்கி இனிமேல் சொத்தில் பாகம் கேட்டால் கொலை செய்து விடுவதாக மிரட்டினர்.
இதுகுறித்து சாந்தகுமாரி கரியாலூர் போலீசில் புகார் செய்தார். போலீஸ் சப்– இன்ஸ்பெக்டர் மணிமாறன் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து தேவராஜை கைது செய்தனர்.
Average Rating