காதல் திருமணம் செய்த புதுப்பெண் தற்கொலை: ஆர்.டி.ஓ. விசாரணை!!

Read Time:1 Minute, 43 Second

e0121877-81f1-4831-8508-dcc4b5b83f09_S_secvpfதிருச்சி ஏர்போர்ட் காமராஜ்நகர் வயர்லெஸ் ரோடு பகுதியை சேர்ந்தவர் சதீஷ் (வயது 27), டிரைவர் வேலை பார்த்து வருகிறார். இவர் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த பிரியா (21) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

திருமணம் முடிந்து சில நாட்களிலேயே சதீஷ் குடித்து விட்டு சரியாக வேலைக்கு செல்லாமல் இருந்துள்ளார். இதனால் கணவன்–மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் மனம் உடைந்த பிரியா சம்பவத்தன்று விஷம் குடித்த நிலையில் வீட்டில் மயங்கி கிடந்தார்.

இதை பார்த்த உறவினர்கள் அவரை மீட்டு திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி பிரியா நேற்று இரவு பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து பொன்மலை அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் திருமணம் ஆகி 6 மாதங்களே ஆவதால் சதீஷிடம், ஆர்.டி.ஓ. பஷீர் இன்று விசாரணை நடத்துகிறார். கணவரின் குடிப் பழக்கத்தால் காதல் திருமணம் செய்த இளம்பெண் 6 மாதத்தில் தற்கொலை செய்து கொண்டது அவரது குடும்பத்தினரை பெரும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post குடும்ப கட்டுப்பாட்டுக்கு மறுத்த கணவர்: 11–வது பிரசவத்தில் உயிரிழந்த இளம்பெண்!!
Next post கள்ளகாதல் தகராறில் தொழிலாளியை குத்திக்கொன்ற வாலிபர்!!