பொன்னேரி அருகே கல்லூரி மாணவி உள்பட 2 பெண்கள் மாயம்!!
Read Time:58 Second
பொன்னேரி மீஞ்சூர் பெரிய முல்லை வாயலை சேர்ந்தவர் வெங்கட். இவரது மகள் பிரியங்கா (20) இவர் ஆவடியில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் 3–ம் ஆண்டு படித்து வந்தார். 15–ந்தேதி கல்லூரிக்கு சென்றார். பின்னர் வீடு திரும்பவில்லை. வெங்கட் பல இடங்களில் மகளை தேடினார் கிடைக்க வில்லை.
இதுகுறித்த மீஞ்சூர் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
மீஞ்சூர் இந்திரா நகரை சேர்ந்தவர் அன்பழகன். இவரது மகள் லவண்யா (24). இவர் கடந்த 10–ந்தேதி வேலைக்கு சென்றார். அதன் பின்னர் வீடு திரும்ப வில்லை. இதுகுறித்து மீஞ்சூர் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
Average Rating