மது குடித்ததை மனைவி கண்டித்ததால் உறவினர் வீட்டில் தொழிலாளி தற்கொலை!!
Read Time:52 Second
செங்கல்பட்டை அடுத்த அனுமந்தபுச்சேரியை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 38). கூலி தொழிலாளி. இவரது மனைவி காயத்ரி. இருவரும் ஊத்துக்கோட்டை ஜெ.ஜெ.நகரில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றனர். அங்கு வெங்கடேசன் மது அருந்தினார். இதனை காயத்ரி கண்டித்து கோபத்தில் அனுமந்தபுச்சேரிக்கு தனியாக வந்துவிட்டார்.
இதில் மனவேதனை அடைந்த வெங்கடேசன் உறவினர் வீட்டிலேயே தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இதகுறித்து ஊத்துக்கோட்டை இன்ஸ்பெக்டர் முத்துராமலிங்கம் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Average Rating