குடும்ப கட்டுப்பாட்டுக்கு மறுத்த கணவர்: 11–வது பிரசவத்தில் உயிரிழந்த இளம்பெண்!!

Read Time:3 Minute, 8 Second

376b5858-b182-4ebf-aef2-9100baa1be62_S_secvpfதிண்டுக்கல் அருகில் உள்ள தோட்டனூத்து வடக்கு தெருவை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது40). ஆட்டோ டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி சித்ரா (35). இவருக்கு 16–வது வயதில் மணிகண்டனுடன் திருணம் நடந்தது. இவர்களுக்கு 4 மன்கள், 6 மகள்கள் என மொத்தம் 10 குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில் 11–வது முறையாக சித்ரா கர்ப்பமானார். ஆனால் கர்ப்பகாலத்தில் எடுக்க வேண்டிய மருத்துவ சிகிச்சைகள் மற்றும் சத்தான உணவுகள் எதுவும் உட்கொள்ளவில்லை. இதனால் குழந்தை வயிற்றிலேயே இறந்து விட்டது. இது தெரியாமல் சித்ரா வீட்டில் எப்போதும் போல் வேலை பார்த்து வந்தார்.

சம்பவத்தன்று அவருக்கு திடீரென வலி ஏற்பட்டது. பிரசவ வலி வந்துள்ளதாக நினைத்து அவரை திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அவரை பரிசோதித்த டாக்டர்கள் வயிற்றில் குழந்தை இறந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். மேலும் குழந்தை வெளிவந்தவுடன் தாயும் பரிதாபமாக உயிரிழந்தார்.

சித்ரா கர்ப்பகாலத்தில் சரியான உணவு சாப்பிடாமல் இருந்ததாலும் மருந்து மாத்திரைகள் எடுத்துக்கொள்ளாமல் இருந்ததாலுமே இறந்ததாக டாக்டர்கள் தெரிவித்தனர். ஊராட்சி பகுதிகளில் ஆரம்ப சுகாதார செவிலியர்கள் வீடு, வீடாக கணக்கெடுத்து கர்ப்பமாக இருக்கும் பெண்களுக்கு இலவச மருத்துவ உதவிகள் செய்து வருகின்றனர். அவ்வாறு இருக்கும்போது சித்ராவிற்கு ஏன்? மருத்துவம் சரியாக செய்யவில்லை என விசாரணை நடத்தி வருவதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

மேலும் அவர்கள் கூறும்போது, சித்ரா குடும்ப கட்டுப்பாடு செய்ய தயாராக இருந்தபோதிலும் அவரது கணவர் இதற்கு சம்மதிக்கவில்லை. இது குறித்து முன்பே தெரிந்திருந்தால் மணிகண்டனுக்கு ‘வாசக்டமி’ குடும்ப கட்டுப்பாடு செய்திருப்போம் என்று தெரிவித்தனர்.

நாகரீகம் வளர்ந்த இந்த காலத்திலும் 35 வயதில் 10 குழந்தைகளை பெற்ற பெண் சரியான விழிப்புணர்வு இல்லாததால் பரிதாபமாக இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. அவர்களின் இந்த அறியாமையால் தற்போது 10 குழந்தைகள் தாயின்றி அனாதையாகி உள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மாணவி கற்பழிப்பு வழக்கு: பால் வியாபாரியை பிடிக்க தனிப்படை கேரளா விரைந்தது!!
Next post காதல் திருமணம் செய்த புதுப்பெண் தற்கொலை: ஆர்.டி.ஓ. விசாரணை!!