வள்ளியூர் அருகே 12 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்: தொழிலாளி கைது!!
நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள சூரங்குடி அரசு பள்ளியில் 5–ம்வகுப்பு மாணவியிடம் செக்ஸ் சில்மிஷத்தில் ஈடுபட்ட தலைமை ஆசிரியர் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவத்தின் பரபரப்பு அடங்கும் முன் வள்ளியூர் பழவூர் அருகே 7–ம்வகுப்பு மாணவியை பக்கத்து வீட்டு தொழிலாளி பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அரங்கேறி உள்ளது. அதன்விவரம் வருமாறு:–
வள்ளியூர் அருகே உள்ள பழவூர் சிதம்பராபுரம் கிராமத்தை சேர்ந்த 12 வயது சிறுமி அனிதா(பெயர் மாற்றப்பட்டுள்ளது ). இவள் அங்குள்ள பள்ளியில் 7–ம்வகுப்பு படித்து வருகிறாள்.
அவளது பக்கத்து வீட்டில் தமிழன் (38) என்பவர் வசித்து வருகிறார். கட்டிட தொழிலாளியான அவருக்கு திருமணமாகி 12 வருடம் ஆகிறது. குழந்தை இல்லை. இதனால் தமிழன் ஒரு பெண்குழந்தையை தத்தெடுத்து வளர்த்து வருகிறார்.
மாலை நேரங்களில் அனிதா,தமிழன் வீட்டுக்கு சென்று அந்த குழந்தையிடம் விளையாடுவாள். அப்போது சிறுமி அனிதாவிடம் தமிழன் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். சிறுமியும் இதை வெளியே சொல்லவில்லை.
இதை சாதகமாக பயன்படுத்தி கொண்ட தமிழன், தனது மனைவி வெளியே சென்றிருந்த போது, சிறுமி அனிதாவை படுக்கை அறைக்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் சிறுமி வலிதாங்க முடியாமல் அலறினார்.
அவளது அழுகை சத்தம் கேட்டு அந்த பகுதியை சேர்ந்தவர்கள் தமிழன் வீட்டை சுற்றி வளைத்து கதவை தட்டினர். நீண்ட நேரம் கழித்து தமிழன் கதவை திறந்துள்ளார். சிறுமி அனிதா அழுதபடி வெளியே வந்து நடந்த விபரத்தை கூறினார்.
இதை கேட்டு ஆத்திரமடைந்த பொதுமக்கள் தமிழனுக்கு தர்மஅடி கொடுத்து பழவூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக வழக்கு பதிவு செய்து தமிழனை கைது செய்தனர்.
பாதிக்கப்பட்ட சிறுமி அனிதாவை, போலீசார் மீட்டு நாகர்கோவில் ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் அனுமதித்துள்ளனர். அங்கு அவளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
நாங்குநேரி அருகே 5–ம்வகுப்பு மாணவியை வகுப்பறையில் வைத்து தலைமையாசிரியர் சில்மிஷம் செய்த சம்பவம் மனதை விட்டு நீங்கும் முன்பு, பழவூர் அருகே நடந்த இந்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Average Rating