8 வயது சிறுமியை கொன்ற சந்தேகநபரை பிடிக்கும் வேட்டையில் ‘ரொக்கி’ மோப்ப நாய்!!
பின்னதுவ – மாதொல, கட்டுபொல்வத்த பகுதி தேயிலை தோட்டத்தில் பாலியல் வல்லுறவின் பின் கொலை செய்யப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 8 வயது சிறுமி ஒருவரின் சடலம் மீட்கப்பட்டதை அடுத்து சந்தேகநபரை கைது செய்ய ´ரொக்கி´ என்ற மோப்ப நாயின் உதவி பெறப்பட்டுள்ளது.
காலி பொலிஸ் மோப்ப நாய் பிரிவின் ரொக்கி மோப்பநாய் சந்தேகநபரின் வீட்டு வளவில் சென்று நின்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அக்மீமன சுமங்கள வித்தியாலயத்தில் தரம் மூன்றில் கல்வி கற்கும் ஜனபல கிராமத்தில் வசிக்கும் தேமுனி பூஜனி ஹசந்தி லங்காதிலக என்ற சிறுமி பாடசாலை சென்று வரும்வேளை இவ்வாறு கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்த சிறுமியின் தந்தை கூலித் தொழிலாளி என்பதோடு தாய் கொழுந்து பறிக்கும் தொழில் செய்வதாகவும் இவர்கள் மிகவும் வறுமை நிலையில் உள்ளவர்கள் என்றும் தெரியவருகிறது.
சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் இதுவரை கைது செய்யப்படவில்லை.
Average Rating