5 வயது சிறுமியை வல்லுறவு செய்த 67 வயது முதியவர் கைது!!
Read Time:1 Minute, 22 Second
யாழ். குருநகர் பகுதியை சேர்ந்த சிறுமியை பாலியல் வல்லுறவு செய்த வயோதிபர் யாழ். பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குருநகர் பகுதியை சேர்ந்த 5 வயது சிறுமியை அவரின் வீட்டிற்கு அருகில் வசிக்கும் 67 வயது வயோதிபர் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கி வந்துள்ளார்.
அதனை அறிந்த சிறுமியின் பெற்றோர் யாழ். பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டை பதிவு செய்தனர். அதனடிப்படையில் நேற்று மாலை குறித்த வயோதிபரை பொலிசார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட வயோதிபரிடம் தாம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
மேலும் பாதிக்கப்பட்ட சிறுமி வைத்திய பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் கூறினர்.
Average Rating