ஆசிரியை கடத்தல்: சந்தேகநபர்களை அடையாளம் கண்ட பொலிஸ்!!

Read Time:1 Minute, 21 Second

332958460arrest 1திருகோணமலை உவர்மலை பகுதியைச் சேர்ந்த ஆசிரியை ஒருவர் கடத்தப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் மூவரும் புதன்கிழமை அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை திருகோணமலை நீதவான் நீதிமன்றத்தில் நீதவான் ரி.சரவணராஜா முன்னிலையில் நேற்று இடம்பெற்றது.

26 வயதான ஆசிரியை ஒருவர் கடந்த 14ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் மூன்று சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றத்தினால் நேற்று வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.

நேற்றைய தினம் அடையாள அணிவகுப்பு நடத்தப்பட்டதுடன், குறிப்பிட்ட ஆசிரியை சந்தேகநபர்களை அடையாளம் காட்டியுள்ளார்.

இதனையடுத்து சந்தேகநபர்கள் மூவரையும் எதிர்வரும் 30ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டதுடன், வழக்கு விசாரணையையும் அன்றைய தினத்திற்கு ஒத்தி வைத்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post 5 வயது சிறுமியை வல்லுறவு செய்த 67 வயது முதியவர் கைது!!
Next post சுஜிபால திருமணத்தின் உண்மை பொய் திடுக்கிடும் தகவல்கள்..!!