வில்லியாக நடிக்கும் ஷகிலா!!
சவாடியா என்னும் இந்திப்படம் உள்ளிட்ட 3 படங்களில் துணை இயக்குனராக பணியாற்றியவர் பி.ரவிக்குமார். சென்னையில் பிறந்த இவர் இயக்குனராக வேண்டும் என்ற ஆசையில் மும்பைக்கு சென்று இந்திப்படங்களில் துணை இயக்குனராக பணியாற்றியுள்ளார். தற்போது இவர் இயக்கும் புதிய படம் ‘உண்மை’. தான் இயக்கும் முதல் படம், தமிழ் படமாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் மதர் கிரின்லேண்ட் மூவி மேக்கர்ஸ் என்ற நிறுவனத்தை தொடங்கி ‘உண்மை’ என்ற படத்தை இயக்கி வருகிறார்.
இதில் இவரே கதாநாயகனாகவும் நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக சுஜிபாலா நடிக்கிறார். மேலும் இவர்களுடன் ராதாரவி, கோட்டா சீனிவாசராவ், சிங்கம் புலி, வாசுவிக்ரம், மீனாட்சி தேசாய், பாண்டு, வையாபுரி, சிந்து, அன்வர் ராஜா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இதுவரை கவர்ச்சி, நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்து வந்த ஷகிலா, இப்படத்தில் வில்லியாக நடித்துள்ளார்.
இந்த நாட்டில் அரசியல்வாதிகள் பதவிக்கு வருவதற்கு முன்னால் வாக்குறுதிகளை அள்ளிக்கொடுக்கின்றனர். பின்னர் ஆடம்பர வாழ்க்கைக்காக கொடுத்த வாக்குறுதிகளை மறந்து விட்டு செய்யும் ஊழலே படத்தின் கதை. இந்த ஊழலால் பாமர மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை விறுவிறுப்பான திரைக்கதையை அமைத்து முழுக்க முழுக்க ஆக்ஷன் படமாக உருவாக்கி வருகிறார்கள்.
இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, ஊட்டி, கொடைக்கானல், நாகர்கோவில் உள்ளிட்ட இடங்களில் நடைபெற்று, இறுதிக் கட்டமாக குலுமனாலியில் படப்பிடிப்பு நடந்து வருகிறது.
Average Rating