இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை!!
Read Time:1 Minute, 20 Second
முள்ளங்குறிச்சி செட்டி பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகள் தீபிகா (வயது 19) இவர் 6-ம் வகுப்பு வரை படித்துள்ளார். இந்நிலையில் வீட்டு வேலைகளை சரியாக செய்யவில்லை என தாய் விஜயா தீபிகாவை திட்டியதாக தெரிகிறது. இதனால் மனம் முடைந்து காணப்பட்ட அவர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வயலுக்கு அடிக்கும் பூச்சி மருந்தை (விஷம்) குடித்தார்.
இதை கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆலங்குடி அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இது குறித்து தீபிகாவின் தாய் விஜயா கொடுத்த புகாரின் பேரில் கறம்பக்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் சகாய அன்பரசன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Average Rating