மண்டேலா நகரில் காதல் ஜோடியை மிரட்டி செல்போன் பறிப்பு: 3 பேர் கைது!!

Read Time:1 Minute, 33 Second

147863ee-339d-48b2-9d4b-7342944487cf_S_secvpfமதுரையில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வருபவர் பவித்ரா. இவர் தனது உறவினரான சாத்தூர் பேச்சிக்குளத்தைச் சேர்ந்த பாலிடெக்னிக் மாணவர் அசோக்குமார் (வயது22) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் மதுரை விமான நிலையத்தை பார்க்க சென்றுள்ளார். இவர்கள் காதலர்கள் என்றும் கூறப்படுகிறது.
மண்டேலா நகர் அருகே மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு அவர்கள் நின்று கொண்டிருந்தனர். அப்போது அங்கு ஒரு ஆட்டோவில் 4 பேர் வந்தனர்.

அவர்கள் காதல் ஜோடியை கத்தியை காட்டி மிரட்டினர். மேலும் அசோக்குமார் வைத்திருந்த ரூ.30 ஆயிரம் மதிப்பிலான செல்போனை கொள்ளையடித்து விட்டு தப்பி சென்று விட்டனர்.

இதுகுறித்து அவனியாபுரம் போலீசில் அசோக்குமார் புகார் செய்தார்.

போலீசார் அதிரடி விசாரணை நடத்தி ரூ.30 ஆயிரம் மதிப்பிலான செல்போனை கொள்ளையடித்ததாக சின்னஉடைப்பை சேர்ந்த பாலசுந்தர் (27), விஜயகுமார் (26), ராஜ்குமார் (25) ஆகிய 3 பேரை கைது செய்தனர். மேலும் ஒருவர் தேடி வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மதுரையில் வெவ்வேறு சம்பவங்கள்: பள்ளி ஆசிரியை-மாணவி கடத்தல்!!
Next post திருச்சி ஆஸ்பத்திரியில் வெறிநாய் கடித்த வாலிபர் சாவு!!