விருதுநகரில் மனநிலை பாதித்த இளம்பெண்ணை கற்பழித்தவர் அடித்துக்கொலை!!
விருதுநகர் அனுமன் நகரைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். இவருடைய மகள் பாப்பாத்தி (வயது 25). மனநிலை பாதிக்கப்பட்டவர். இவர்களது பக்கத்து வீட்டைச் சேர்ந்தவர் முருகேசன் (44). இவர் கடந்த 15–ந்தேதி வீட்டில் யாரும் இல்லாத போது பாப்பாத்தியை அவரது வீட்டுக்குள் வைத்து பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.
இதுபற்றி தெரியவந்ததை தொடர்ந்து நேற்று முன்தினம் (16ந்தேதி) பாப்பாத்தியின் பெற்றோர் பாலகிருஷ்ணன், முத்துலட்சுமி ஆகியோர் சென்று முருகேசனிடம் கேட்டனர். அதற்கு அவர் அலட்சியமாக பதில் தெரிவித்ததாக தெரிகிறது.
இதைத்தொடர்ந்து அவர்கள் இருவரும் தங்களது உறவினர்கள் ஜெயராமன், ராமச்சந்திரன், ஜெயபாண்டி ஆகியோரை அழைத்துச் சென்று மீண்டும் முருகேசனிடம் விசாரித்தனர்.
அப்போது அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்து கம்பால் தாக்கியதில் முருகேசனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அவர் விருதுநகரில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
பின்னர் அவர் மதுரை பெரிய ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு முருகேசனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்த சம்பவம் குறித்து விருதுநகர் கிழக்கு போலீசில் முருகேசனின் மனைவி செல்வி (32) புகார் செய்தார். இதன்பேரில் பாலகிருஷ்ணன், அவருடைய மனைவி முத்துலட்சுமி, உறவினர்கள் ஜெயராமன், ராமச்சந்திரன், ஜெயபாண்டி ஆகியோர் மீது கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
இந்தநிலையில் மதுரை பெரிய ஆஸ்பத்திரியில் சிகிச்சையில் இருந்த முருகேசன் நேற்று பரிதாபமாக இறந்து போனார். இதைத்தொடர்ந்து இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
Average Rating