காதலன், வியாபாரியால் கற்பழிப்பு: மாணவிக்கு பிறந்த குழந்தைக்கு டி.என்.ஏ. பரிசோதனை!!
கொல்லங்கோடு பகுதியை சேர்ந்த பிளஸ்–1 மாணவி கற்பழிப்பு வழக்கில் அவரது காதலன் அஜிஸ், வியாபாரி ஜோஸ் ஆகியோர் மீது குளச்சல் அனைத்து மகளிர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் மாணவிக்கு குறை பிரசவத்தில் ஆண் குழந்தை பிறந்தது. தற்போது தாயும், சேயும் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதற்கிடையே, குழந்தையின் தந்தை யார்? என்பதை கண்டறிய டி.என்.ஏ. பரிசோதனை நடத்த போலீசார் முடிவு செய்தனர். அதன்படி மரபணு சோதனை நடத்துவற்கு அனுமதி வழங்குமாறு மதுரை ஐகோர்ட்டில் போலீசார் மனு செய்தனர். அதை ஏற்றுக்கொண்ட நீதிபதி மரபணு சோதனைக்கு அனுமதி வழங்கினார்.
இதைத்தொடர்ந்து, இன்று அல்லது நாளை மாணவி மற்றும் அவரது குழந்தையின் ரத்தமாதிரிகளை சேகரித்து மதுரையில் உள்ள ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
மேலும், வெளிநாடு தப்பி ஓடிய காதலன் அஜிசை திரும்ப வரவழைக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அதோடு, இவ்வழக்கில் தலைமறைவான பால் வியாபாரி ஜோசை தேடி கேரளா சென்ற தனிப்படை போலீசார் அங்கு முகாமிட்டு தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தி உள்ளனர்.
இவர்கள் கைது செய்யப்படும் போது இவர்களின் ரத்தமாதிரிகளை சேகரித்து மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்படும் என்று போலீசார் தெரிவித்தனர்.
Average Rating