புதுவையில் மீண்டும் விபசார கும்பல்: பல மாநில அழகிகளை வைத்து பாலியல் தொழில்!!
பல மாநில அழகிகளை புதுவைக்கு கொண்டு வந்து ஒரு கும்பல் விபசாரம் நடத்தி வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனையடுத்து வாடகைக்கு புதிதாக குடி வருபவர்கள் மற்றும் அப்பார்ட்மெண்ட்களை தீவிரமாக கண்காணிக்கும்படி புதுவை வடக்கு பகுதி சூப்பிரண்டு ரவிக்குமார், போலீஸ் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதனையடுத்து போலீஸ் அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் லாஸ்பேட்டை கிருஷ்ணா நகர் 9–வது குறுக்கு தெருவில் உள்ள ஒரு வீட்டில் சந்தேகப்படும்படியாக சிலர் வாடகைக்கு குடியிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து போலீசார் அந்த வீட்டை அதிரடியாக சென்று சோதனையிட்டனர். ஆனால் போலீசாரின் வருகையை அறிந்து அந்த கும்பல் உஷாராகி தப்பியோடிவிட்டது. இதனால் போலீசார் ஏமாற்றமடைந்தனர்.
மேலும் தொடர்ந்து அதே கண்ணோட்டத்தில் நோட்டமிட்டு வந்தனர். இந்நிலையில் லாஸ்பேட்டை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள அப்பார்ட்மெண்டில் ஒரு கும்பல் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதனைத்தொடர்ந்து சப்–இன்ஸ்பெக்டர்கள் ரமேஷ், இளங்கோ தலைமையிலான போலீசார் நேற்று காலை அங்கு சென்று சுற்றி வளைத்தனர். அப்போது அங்கு 2 கொல்கத்தா அழகிகள் இருந்தனர். அவர்களுடன் சென்னை பள்ளிக்கரணையை சேர்ந்த தேவராஜியும் (வயது 28) இருந்தார். அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
போலீஸ் விசாரணையில் புதுவை குமரகுருபள்ளத்தை சேர்ந்த வேளாங்கண்ணி இந்த கொல்கத்தா அழகிகளை வைத்து விபசாரம் நடத்தியது தெரியவந்தது. அவருக்கு அழகிகளை சப்ளை செய்தது பெங்களூரை சேர்ந்த சோனு ஆவார். அவரை தேடி தனிப்படை போலீசார் பெங்களூர் விரைந்துள்ளனர்.
கொல்கத்தா அழகிகளிடம் போலீசார் மேற்கொண்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. விபசார கும்பல் தலைவனான சோனுவுக்கு பல மாநில விபசார நெட்வொர்க்குடன் தொடர்புள்ளது. அவன் அவர்களிடமிருந்து ஒப்பந்த அடிப்படையில் அழகிகளை எடுத்து ஒவ்வொரு நகரங்களுக்கும் சென்று தங்கி விபசாரத்தில் ஈடுபடுத்தியது தெரிய வந்துள்ளது.
மேலும் இதற்காக சோனு தான் போகும் நகரங்களில் எல்லாம் விபசார தொழிலை செய்வதற்கு என பலரை உருவாக்கி வந்துள்ளான். அந்த வகையில் புதுவையில் அவனுடன் வேளாங்கண்ணியை தவிர மேலும் பலருக்கு தொடர்பு இருக்கும் என போலீசார் சந்தேகிக்கின்றனர். சோனு, வேளாங்கண்ணியை பிடிக்க போலீசார் தேடி வருகிறார்கள். அவர்கள் சிக்கிய பிறகு மேலும் பல தகவல்கள் வெளியாகும் என்று தெரிகிறது.
Average Rating