வத்தலக்குண்டுவில் கர்ப்பிணி மனைவியை கொன்ற கணவன் கைது!!

Read Time:2 Minute, 9 Second

05cbcc9e-a13e-4b72-b1eb-b57b67d8fdec_S_secvpfவத்தலக்குண்டு காந்திநகர் லெனின் நகரை சேர்ந்தவர் மணிகண்டபிரபு. அங்குள்ள ஒரு ஓட்டலில் டீ மாஸ்டராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி மாலதி. ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்து பெற்ற இவர்கள் கடந்த 10 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர்.
4 மாத கர்ப்பமாக இருந்த மாலதியிடம் கடந்த 16–ந் தேதி மதியம் மணிகண்டபிரபு கட்டாயப்படுத்தி உறவு கொண்டுள்ளார்.

அதன்பின் குளித்து விட்டு வந்த மாலதியை மீண்டும் உறவுக்கு அழைத்துள்ளார். அதற்கு மாலதி சம்மதிக்கவில்லை. மணிகண்டபிரபு கட்டாயப்படுத்தியதால் மாலதி சத்தம்போட்டார். இதனால் மணிகண்டபிரபு போர்வையால் மாலதி முகத்தை அமுக்கினார்.

இதில் மூச்சு திணறிய மாலதி இறந்து விட்டார். இதனால் பயந்துபோன மணிகண்டபிரபு வீட்டை பூட்டிவிட்டு தப்பி சென்றார்.

இது குறித்து வத்தலக்குண்டு இன்ஸ்பெக்டர் வினோஜி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான மணிகண்ட பிரபுவை தேடி வந்தனர்.

கொலை சம்பவத்துக்கு பிறகு மணிகண்டபிரபு பழனி அருகே உள்ள கோரிக்கடவுக்கு சென்று குலதெய்வத்தை வணங்கியுள்ளார். பின்னர் அங்கிருந்து கொடைக்கானல் சென்றார். நேற்று மாலை அவர் அங்கிருந்து வத்தலக்குண்டுவிற்கு பஸ்சில் வந்து கொண்டிருந்தார்.

இதனை அறிந்த போலீசார் அவரை காட்ரோடு பகுதியில் கைது செய்தனர். நிலக்கோட்டை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட அவர் திண்டுக்கல் ஜெயலில் அடைக்கப்பட்டார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post விளாத்திகுளம் அருகே 2 குழந்தைகளை கொன்று இளம்பெண் தற்கொலை!!
Next post திருவண்ணாமலை மாவட்டத்தில் அனைத்து வீடுகளிலும் கழிப்பறை கட்டாயம்: கலெக்டர் வேண்டுகோள்!!