கூடுவாஞ்சேரி அருகே 10–ம் வகுப்பு மாணவி காதலனுடன் ஓட்டம்!!
Read Time:52 Second
வண்டலூரை சேர்ந்த மண்ணிவாக்கத்தை சேர்ந்தவர் ஜெயா (வயது 14) (பெயர் மாற்றப்பட்டுள்ளது) அதே பகுதியில் உள்ள பள்ளியில் 10–ம் வகுப்பு படித்து வந்தார்.
கடந்த 16–ந் தேதி பள்ளிக்கு சென்ற ஜெயா பின்னர் வீடு திரும்பவில்லை. இது குறித்து ஓட்டேரி போலீசில் பெற்றோர் புகார் செய்தனர். இன்ஸ்பெக்டர் வெங்கடாசலம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.
மதுராந்தகத்தை சேர்ந்த உறவினர் ஒருவரை ஜெயா காதலித்து வந்ததும் அவருடன் ஓட்டம் பிடித்து இருப்பதும் தெரியவந்தது. அவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
Average Rating