சென்னிமலை அருகே கவுன்சிலருடன் சென்ற புதுப்பெண் பெற்றோர் வசம் ஒப்படைப்பு!!

Read Time:2 Minute, 34 Second

6aeb0bf5-67e7-48e5-99da-4786731b2be4_S_secvpfசென்னிமலை அருகே உள்ள கந்தசாமிபாளையத்தை சேர்ந்தவர் கோகிலா (வயது 23). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ஒரு ஆசிரியருக்கும் கடந்த 4–ந் தேதி திருமணம் நடந்தது.

திருமணம் நடந்த மறுநாள் கோகிலா உறவினர்களுடன் சென்னிமலை சந்தைக்கு சென்றார். பின்னர் அங்கிருந்து திடீரென மாயமானார்.

இதுபற்றி சென்னிமலை போலீசில் கோகிலாவின் பெற்றோர் புகார் செய்தனர். போலீசார் புதுப்பெண்ணை தேடி வந்தனர். விசாரணையில் சென்னி மலை வெப்பிலியை சேர்ந்த செல்வம் (வயது 40) என்ற ஊராட்சி கவுன்சிலர் அவரை கடத்தி சென்றது தெரிய வந்தது.

பின்னர் தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் எப்போதும் வென்றான் பகுதியில் செல்வமும், கோகிலாவும் விஷம் குடித்து மயங்கி கிடந்தனர். தூத்துக்குடி போலீசார் அவர்களை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

செல்வம் புதுப்பெண்ணை கடத்தி செல்ல சென்னிமலை சோழன் வீதியை சேர்ந்த தனது நண்பர் துரைசாமியின் காரை பயன்படுத்தியதாக கூறப்பட்டது. கோவிலுக்கு செல்வதாக காரை வாங்கிய செல்வம் வெகுநேரமாகியும் திரும்பி வரவில்லை.

இதையடுத்து துரைசாமி நண்பரை தொடர்பு கொண்டு கேட்டுள்ளார். அப்போது காரை திரும்பி தர முடியாது என கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுபற்றி துரைசாமி சென்னிமலை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்வத்தை கைது செய்தனர்.

புதுப்பெண் அவரின் பெற்றோர் வசம் ஒப்படைக்கப்பட்டார். கோகிலாவை திருமணம் செய்த ஆசிரியரின் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளன. ஆனால் ஆசிரியர் கோகிலாவை மன்னித்து ஏற்றுக்கொள்வாரா? என்று தெரியவில்லை.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வீடு புகுந்து இளம்பெண்ணை மானபங்கம் செய்ய முயற்சி: போலீஸ்காரர் உள்பட 2 பேருக்கு வலைவீச்சு!!
Next post கூடுவாஞ்சேரி அருகே 10–ம் வகுப்பு மாணவி காதலனுடன் ஓட்டம்!!