வீடு புகுந்து இளம்பெண்ணை மானபங்கம் செய்ய முயற்சி: போலீஸ்காரர் உள்பட 2 பேருக்கு வலைவீச்சு!!
தூத்துக்குடி மாவட்டம் மெஞ்ஞானபுரத்தை சேர்ந்தவர் விந்தியா (வயது 26) (பெயர்மாற்றபட்டுள்ளது). திருமணமாகாத இவர் சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருந்தார். அப்போது அங்கு வந்த அதே பகுதியை சேர்ந்த சாத்தான்குளம் போலீஸ் நிலையத்தில் காவலராக பணிபுரியும் பிரேம்குமார், அவரது நண்பர் ஜேஸ்கர் ஆகிய 2 பேரும் அத்துமீறி வீடுபுகுந்து விந்தியாவை மானபங்கப்படுத்த முயன்றனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த விந்தியா கூச்சலிட்டார். இதை கேட்டு அவரது பெற்றோர் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் திரண்டு வந்தனர். ஆத்திரமடைந்த பிரேம்குமார், ஜேஸ்கர் ஆகிய இருவரும் விந்தியாவின் பெற்றோரை சரமாரியாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்துவிட்டு தப்பிஓடிவிட்டனர்.
இச்சம்பவம் குறித்து மெஞ்ஞானபுரம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து இளம்பெண்ணை மானபங்கபடுத்த முயன்ற போலீஸ்காரர் பிரேம்குமார் உள்பட 2 பேரை தீவிரமாக தேடி வருகின்றனர்.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Average Rating