2 வயது மகனை கொன்று கர்ப்பிணி தாய் தற்கொலை!!

Read Time:5 Minute, 6 Second

04bb95f0-73a5-41d7-b036-b44b91c7fe31_S_secvpfதிருச்சி வயலூர் ரோடு பாரதிநகர் 11 வது குறுக்குத் தெருவைச் சேர்ந்தவர் சிவகுருநாதன்.(வயது 31) இவர் காட்டூரில் உள்ள தனியார் பிளாஸ்டிக் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.

இவரது மனைவி சுதா (28) இவர்களுக்கு 2 வயதில் கவுதம் என்ற மகன் இருந்தார். சுதா தற்போது 5 மாத கர்ப்பிணியாக இருந்தார்.

நேற்று சிவகுருநாதன் காட்டூரில் வேலை முடிந்து சாப்பாட்டிற்காக மதியம் 3 மணிக்கு வீட்டிற்கு வந்தார். அப்போது சுதாவும், மகன் கவுதமும் வீட்டில் பிணமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

மகன் கவுதம் கழுத்தில் கத்தியால் அறுக்கப்பட்டிருந்தது. சுதா தூக்கில் பிணமாக தொங்கினார். எனவே மகன் கவுதமை கழுத்தை கத்தியால் அறுத்து கொன்று விட்டு சுதா தற்கொலை செய்ததாக கூறப்பட்டது.

இது குறித்து திருச்சி புத்தூர் அரசு ஆஸ்பத்திரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். கர்ப்பிணி தாய் சுதா, 2 வயது மகனை கொடூரமாக கொன்று தற்கொலை செய்ய காரணம் என்ன?என்று போலீசார் விசாரணை நடத்தினர்.

சுதாவின் கணவர் சிவகுருநாதன்,பெற்றோர் ராஜூ,செண்பகம் மற்றும் உறவினர்களிடம் இன்ஸ்பெக்டர் சீதாராமன் இன்று தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்.

சுதாவின் பெற்றோருக்கு சொந்த ஊர் கும்பகோணம் ஆகும். அவரது பெற்றோர் சென்னை ராமாவரம் எம்.ஜி.ஆர் தோட்டம் பின் புறம் உள்ள ரவி என்பவரது உறவினர் வீட்டில் தங்கி குடும்பம் நடத்தினர்.

அப்போது அங்கு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த சிவகுருநாதன் உடன் சுதாவுக்கு காதல் ஏற்பட்டது. இருவரும் 4 வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்தனர். தற்போது திருச்சியில் வாழ்ந்து வந்தனர்.

வயலூர் ரோடு பாரதி நகர் வீட்டிற்கு கடந்த 8 மாதங்களுக்கு முன்பு தான் குடி வந்துள்ளனர். நேற்று முன்தினம் மாலை சிவகுருநாதன் கர்ப்பிணியான சுதாவை ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று டாக்டரிடம் காட்டியுள்ளார்.

நேற்று காலை சிவகுருநாதன் வழக்கம் போல் வேலைக்கு சென்ற போது சுதா வாசலில் நின்று டாட்டா காட்டியுள்ளார். மதியம் சிவகுருநாதன் சாப்பாட்டிற்கு வருவதாக கூறி சென்றுள்ளார். மதிய சாப்பாட்டிற்கு வந்த போது தான் சுதாவும்,கவுதமும் பிணமாக கிடந்துள்ளனர்.

இடையில் மாநகராட்சியில் இருந்து மக்கள் தொகை கணக்கு எடுக்க ஆட்கள் வந்து சென்றுள்ளனர். 12.30 மணி வரை சுதாவை அக்கம் பக்கத்தினர் பார்த்துள்ளனர். அதன் பிறகு தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. வசதி குறைவான வாழ்க்கையில் மன அழுத்தத்தில் இருந்த சுதா மகன் கவுதமை கழுத்தை அறுத்துக் கொன்று தற்கொலை செய்திருக்கலாம் என கூறப்படுகிறது.

இருப்பினும் காலையில் கணவரை சந்தோஷமாக வழியனுப்பி விட்டு அக்கம் பக்கத்தினரிடம் பேசிக் கொண்டிருந்த சுதா மகனை கொன்று விட்டு தற்கொலை செய்யும் அளவிற்கு தூண்டப்பட்ட காரணம் என்ன?என்பது மர்மமாக உள்ளது.

இது தொடர்பாக போலீசார் கணவர் சிவகுருநாதன், சுதாவின் பெற்றோர் ராஜூ–செண்பகம் மற்றும் அக்கம் பக்கத்து வீட்டினரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.வீட்டில் ரத்தக்கறை படிந்த கத்தி மற்றும் தூக்கு கயிறு ஆகியவற்றை கைப்பற்றி உள்ளனர். தடையவியல் துறை போலீசாரும் கை ரேகைகளை ஆய்வு செய்தனர். இன்று சுதா, கவுதமின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்படுகிறது. பிரேத பரிசோதனையின் முடிவில் சுதா,கவுதமின் சாவில் மர்மங்கள் விலகும் என்று போலீசார் கூறினர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வத்தலக்குண்டு அருகே கோவில் மலையில் மயங்கி விழுந்த பெண்!!
Next post விபசார வழக்கில் மதுரை போலீஸ்காரர் உள்பட 4 பேர் கைது!!