பணகுடி அருகே கொள்ளை வழக்கில் புதுமாப்பிள்ளை கைது!!

Read Time:3 Minute, 59 Second

1876645073Untitled-1நெல்லை மாவட்டம் பணகுடி அருகே உள்ள வடக்கன்குளம் போஸ்ட் ஆபீஸ் தெருவை சேர்ந்தவர் மைக்கேல் இருதய ஜாக்ஸ் (வயது 31). வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். வடக்கன்குளத்தில் உள்ள வீட்டில் மைக்கேலின் தாய், தந்தையர் மட்டும் வசித்து வருகின்றனர்.

கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு மைக்கேல் அக்காள் மகளுக்கு குழந்தை பிறந்தது. குழந்தையை பார்ப்பதற்காக மைக்கேல் இருதய ஜாக்ஸ் விடுமுறையில் ஊருக்கு வந்து இருந்தார்.

பின்னர் அவர் தனது குடும்பத்தினருடன் நாகர்கோவிலில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அக்கா மகனை பார்க்க சென்றுவிட்டார்.

அப்போது இரவில் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து வீட்டில் இருந்த 57 பவுன் நகைகளை மர்ம நபர் கொள்ளை அடித்துச் சென்றனர்.

இதுகுறித்து பணகுடி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும் இதுதொடர்பாக போலீசார் தனிப்படை அமைத்து தேடி வந்தனர். இந்த நிலையில் பணகுடி போலீசார் காவல்கிணறு சந்திப்பில் வாகன சோதனை நடத்திக் கொண்டு இருந்தனர்.

அப்போது அந்த வழியாக வந்த வாலிபர் ஒருவர், போலீசாரை பார்த்ததும் ஓட முயன்றார்.

இதனால் உஷாரான போலீசார் விரட்டிச் சென்று வாலிபரை பிடித்தனர். விசாரணையில்,அவர் நாகர்கோவில் பார்வதியாபுரத்தை சேர்ந்த கோபி (வயது 31) என்பது தெரிந்தது. அவரிடம் விசாரணை நடத்தியபோது அவர் மைக்கேல் இருதய ஜாக்ஸ் வீட்டில் நகை திருடியவர் என தெரியவந்தது.

கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வரும் இவருக்கு கடந்த 6 மாதங்களுக்கு முன்பு தான் திருமணம் நடந்தது. வடக்கன்குளத்தில் நடந்த கட்டிட வேலைக்காக கோபி அங்குள்ள உள்ள ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கியுள்ளார். அந்த வீடு, மைக்கேல் இருதய ஜாக்ஸ் வீட்டின் அருகே அமைந்துள்ளதாகும்.

மைக்கேல் குடும்பத்தினர் வசதியாக இருப்பதையும், சம்பவத்தன்று இரவு மைக்கேல் குடும்பத்தினர் அனைவரும் நாகர்கோவில் சென்று இருந்ததையும் அறிந்த கோபி, அந்த வீட்டின் பின்பக்க கதவை உடைத்து 57 பவுன் நகைகளை கொள்ளை அடித்ததும் போலீஸ் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும் கொள்ளை அடிக்கப்பட்ட நகைகளில் 30 பவுன் நகைகளை வடக்கன்குளத்தில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்துக்கு பின்னால் மண்ணில் புதைத்து வைத்து இருந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து 30 பவுன் நகைகளை கோபியிடம் போலீசார் மீட்டனர். மீதமுள்ள நகைகளை கோபி தனது தாய் ராணியிடம் கொடுத்ததாக தெரிகிறது.

இதையடுத்து ராணியை போலீசார் தேடி வருகிறார்கள். இந்த கொள்ளையில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? என்று போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post காதல் மனைவியுடன் தகராறு: விஷம் குடித்து போலீஸ் ஏட்டு தற்கொலை!!
Next post சிறுமி பாலியல் பலாத்காரம் வழக்கில் வாலிபருக்கு 7 ஆண்டு ஜெயில்!!