கற்பழிப்பு புகார் கொடுப்பேன் என்று மிரட்டி சிறுவர்களிடம் பணம் பறிக்க முயன்ற பெண் கைது!!

Read Time:2 Minute, 25 Second

fb862eef-30a0-4fea-af84-193ceaeceb8a_S_secvpfராஜஸ்தான் மாநில தலைநகர் ஜெய்ய்பூரின் புறநகரான சாங்கனெர் பகுதியில் வசித்துவரும் கொல்கத்தாவைச் சேர்ந்த சுமார் 27 வயது மதிக்கத்தக்க பெண், அப்பகுதியில் உள்ள சில போலீஸ் நிலையங்களில் கடந்த 9 மாத காலத்தில் 6 பேர் மீது கற்பழிப்பு, கற்பழிப்பு முயற்சி மற்றும் பாலியல் கொடுமை தொடர்பாக புகார் அளித்து வந்துள்ளார்.

நேற்றிரவு, தனது வீட்டுக்கு அருகே திருமணமாகாத 4 சிறுவர்கள் தனியாக வசிக்கும் அறைக்குள் நுழைந்த அந்தப் பெண் மது அருந்துவதற்கு பணம் கேட்டு தகராறு செய்துள்ளார். பணம் தர மறுத்த சிறுவர்கள் மீது போலீசில் கற்பழிப்பு புகார் கொடுத்து, தூக்கி ஜெயிலில் போட்டு விடுவேன் என அந்தப் பெண் மிரட்டியுள்ளார்.

பின்னர், தனது செல்போன் மூலம் போலீசாரை தொடர்பு கொண்டு, சில சிறுவர்கள் தன்னை ஒரு வீட்டுக்குள் அடைத்து வைத்து கற்பழிக்க முயற்சிப்பதாக புகாரும் அளித்தார்.

போலீசார் வந்து பார்த்தபோது, அந்த சிறுவர்கள் ஏதுமறியாத அப்பாவிகளாய் வெளியே நின்றுக் கொண்டிருந்தனர். உள்ளே அந்தப் பெண் குடி போதையில் ரகளை செய்துக் கொண்டிருந்தாள்.

இதனையடுத்து, அவளை கைது செய்த போலீசாரிடம் சிறுவர்களிடம் பணம் பறிக்கும் நோக்கத்தில் அப்படி மிரட்டினேன் என்று வாக்குமூலம் அளித்தவளுக்கு நடத்தப்பட்ட மருத்துவப் பரிசோதனையில் அவள் குடிபோதையில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனையடுத்து, வழக்குப்பதிவு செய்த போலீசார் அவளை இன்று கோர்டில் ஆஜர்படுத்தினர். குற்றவாளியை 15 நாள் சிறையில் அடைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தீபிகாவின் ஆவேசம் அள்ளியது ஒரு இலட்சம் லைக்குகளை!!
Next post கும்பகோணம் அருகே பெண்ணை கட்டிப்போட்டு நகையை கொள்ளையடித்தது அண்ணன்–தங்கை!!