விபசார வழக்கில் போலீஸ்காரர் கைது!!
மதுரை மாட்டுத்தாவணி பஸ் நிலையத்தில் தூத்துக்குடியை சேர்ந்த பாலமுருகன் என்பவர் இரவில் நின்று கொண்டிருந்தார். கடலூரில் நர்சிங் படித்து வரும் இவர் பஸ்சுக்காக காத்து நின்ற போது வாலிபர் ஒருவர் அவரிடம் பேச்சு கொடுத்துள்ளார்.
அவர் ஆயிரம் ரூபாய் கொடுத்தால் பெண்களுடன் உல்லாசமாக இருக்கலாம் என பாலமுருகனிடம் கூறி உள்ளார். இதனை கேட்ட பாலமுருகன் அவருடன் சென்றார்.
மதுரை செல்லூர் பகுதிக்கு பாலமுருகனை அழைத்து சென்ற வாலிபர் அங்கு ஒரு வீட்டிற்கு கூட்டி சென்றார். அந்த வீட்டில் 2 பெண்கள் இருந்துள்ளனர். அவர்களை கண்டதும் பாலமுருகன் திடீரென அங்கிருந்து ஓட்டம் எடுத்து செல்லூர் போலீஸ் நிலையம் வந்து புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் குறிப்பிட்ட வீட்டிற்கு விரைந்து சென்று சோதனை நடத்தினர். அப்போது அங்கு பெண்களை வைத்து விபசாரம் செய்யப்படுவது தெரியவந்தது. இதனை தொடர்ந்து அங்கு இருந்த ராதா (வயது32), கலைச் செல்வி (29) ஆகியோரையும், பாலமுருகனை அழைத்து வந்த புரோக்கர் மாரிமுத்துவையும் கைது செய்தனர்.
கைதான பெண்களிடம் விசாரணை நடத்தியபோது அவர்கள் அதிர்ச்சி தரும் வகையில் போலீஸ்காரர் ஒருவரே தங்களை வீட்டில் வைத்து பாலியல் தொழில் செய்வதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து செல்லூர் போலீசார் தீவிர விசாரணை நடத்தி பெண்களை வைத்து விபசார தொழில் செய்ததாக எஸ்.எஸ்.காலனி போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக வேலை பார்க்கும் பாலமுருகனை கைது செய்தனர்.
Average Rating