வாலிபர் மானபங்கத்தால் அவமானம்: கல்லூரி மாணவி தற்கொலை!!

Read Time:2 Minute, 15 Second

04bb95f0-73a5-41d7-b036-b44b91c7fe31_S_secvpfநத்தம் அருகே உள்ள மூங்கில்பட்டியை சேர்ந்தவர் முத்துச்செல்வம். இவரது மகள் பானுப்பிரியா (வயது19). மதுரையில் உள்ள கல்லூரியில் படித்து வந்தார். பக்கத்து ஊரான பட்டணம்பட்டியை சேர்ந்தவர் ராமன் மகன் சின்னதம்பி(24) கட்டிட தொழிலாளியான இவர் சென்னையில் கம்பிகட்டும் வேலை செய்து வந்தார். கடந்த வாரம் ஊருக்கு வந்த இவர் பானுப்பிரியாவை பார்த்து அவரது அழகில் மயங்கினார்.

பானுபிரியாவை திருமணம் செய்துகொள்ள எண்ணிய அவர் அதுபற்றி தனது விருப்பத்தை தெரிவித்தார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த பானுப்பிரியா மறுத்து விட்டார். நான் கல்லூரியில் படிக்கிறேன். நீங்கள் கூலிவேலை செய்கிறீர்கள் நமக்கு பொருத்தம் சரிவராது என்றார். சின்னதம்பி தனது எண்ணத்தை கைவிடவில்லை.

சம்பவத்தன்று தோட்டத்து வீட்டில் தனியாக இருந்த பானுப்பிரியாவிடம் தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு சின்னதம்பி வற்புறுத்தியுள்ளார்.

சத்தம் போட்ட பானுபிரியா இங்கிருந்து போய்விடுங்கள் என்று எச்சரித்தார். இதனால் ஆத்திரமடைந்த சின்னதம்பி பானுப்பிரியாவின் துப்பாட்டாவை இழுத்தார். அவர் கூச்சல்போடவே சின்னதம்பி அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். நடந்த சம்பவத்தை தாயிடம் கூறிய பானுப்பிரியா மனவேதனையில் இருந்தார். சின்னதம்பி செய்த செயலால் அவமானம் அடைந்த அவர் விஷம் குடித்து தற்கொலை செய்தார்.

இதுகுறித்து நத்தம் போலீசார் வழக்குபதிவு செய்து சின்னதம்பியை கைது செய்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தகராறை தட்டிக்கேட்டதால் பஞ்சாயத்து தலைவரின் கைவிரலை கடித்து துப்பிய தொழிலாளி!!
Next post ஜவுளிக்கடையில் 9 சேலை திருடிய பெண் உள்பட 2 பேர் கைது!!