சிறுமியை துஷ்பிரயோகம் செய்த மூன்று பிள்ளைகளின் தந்தை கைது!!
சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சந்தேக நபரை உப்புவெளி பொலிஸார் கடந்த சனிக்கிழமை கைது செய்துள்ளனர். இது தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது;
திருகோணமலை அன்புவழிபுரம் கிராமத்தை சேர்ந்த 15 வயது சிறுமியொருவரை பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கிய குற்றச்சாட்டின் பேரில் மேசன் தொழில் புரியும் 35 வயது நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
செல்வநாயகபுரம் கிராமத்தை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான சபேசன் என்பவரே கைது செய்யப்பட்டுள்ளார். தனது அம்மம்மாவுடன் வசித்து வந்த இச்சிறுமியின் வீட்டுக்கு மேற்படி நபர் அடிக்கடி சென்று வருவதாகவும் பழக்கத்தின் நிமித்தம் சென்று வந்த நபர் சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளார்.
சிறுமியின் தாயார் பணிப்பெண்ணாக வெளிநாட்டுக்கு சென்ற நிலையில் தந்தை வேறு மணம் முடித்து சென்ற விட்டமையினால் தனது அம்மம்மாவின் மேற்பார்வையில் சிறுமி வசித்து வந்துள்ளார்.
இதன்போதே துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகியுள்ளார்.
சிறுமியை வைத்தியப் பரிசோதனைக்காக திருகோணமலை அரசாங்க வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் சந்தேக நபரை இன்று திங்கட்கிழமை உப்புவெளி பொலிஸ் நீதிமன்றில் ஆஜர்படுத்தினர் என்றும் திருகோணமலை மாவட்ட பெண்கள் சமாஜம் தெரிவித்தது.
Average Rating